ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறை

ரத்தத்தின் அளவை அதிகரிக்க கூடிய அற்புத உணவுகள்.

ரத்தசோகையானது இரும்புச்சத்து குறைபாடு, போலிக் ஆசிட் குறைபாடு, வைட்டமின் பி குறைபாடு போன்றவற்றால் ஏற்படும். இது முற்றினால் நரம்பு பாதிப்பு ஏற்படும். ஆகவே உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பராமரிக்க வேண்டியது அவசியம்.

உடலில் உள்ள ரத்தத்தின் அளவை அதிகரிக்க கூடிய உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதை படித்து அவற்றை உணவில் சேர்த்துக் கொண்டு வருவதால் ரத்தத்தின் உற்பத்தியை அதிகரிக்க முடியும். ரத்த சோகையில் இருந்து நிவாரணம் பெற பச்சை இலைக் காய்கறிகளில் பசலைக் கீரை, அரைக் கீரை, சிறு கீரை போன்றவற்றை டயட்டில் சேர்த்து வரலாம்.

ஆட்டு ஈரல் இரும்புச்சத்து, வைட்டமின்கள், பாஸ்பரஸ் போன்றவை இருப்பதால் வாரம் ஒருமுறை ஆட்டு ஈரலை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளலாம். ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். தக்காளியில் விட்டமின் சி இருப்பதால் இரும்புச்சத்தை உறிஞ்சும் வைட்டமின் சி நிறைந்த உணவையும் சேர்த்து வருவதால் தான் ரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியும்.

மாதுளையில் இரும்புச்சத்து, கால்சியம், புரோட்டீன், கனிமச் சத்து, வைட்டமின்கள் நிறைந்து காணப்படுவதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க ரத்த சோகை குணமாக இதை அன்றாடம் உணவில் உட்கொண்டு வரலாம். சிட்ரஸ் பழங்கள் நிறைந்த ஆரஞ்சு பழம், அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை போன்றவை இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் சி வளமையாக நிறைந்துள்ளன.

பார்ஸ்லி போலிக் ஆசிட், இரும்புச் சத்து நிறைந்த விட்டமின் சி மற்றும் இதர வைட்டமின்கள் நிறைந்திருப்பதால் ரத்தசோகை இருப்பவர்களுக்கு ஏற்றது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதாலும் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். தேன் இரும்புச்சத்து மற்றும் இதர வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கின்றன. எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து குடித்து வரலாம் இஞ்சிச் சாறு ஆரஞ்சு ஜூஸ் பலவகைகளிலும் தேன் கலந்து குடிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.

வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரைக்கு பதிலாக டீ போன்ற பானங்களில் வெல்லத்தை சேர்த்து கலந்து குடித்து வரலாம். சிவப்பு நிறத்தில் இருப்பதால் என்னவோ பொதுவாக பீட்ரூட் உண்டால் ரத்தம் ஊறும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். எனவே வாரம் இரண்டு முறை பீட்ரூட் உண்ணலாம். உலர் திராட்சையில் கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, ஊட்டச் சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் ஸ்நாக்ஸ் நேரத்தில் இவற்றை சாப்பிடுவதால் ரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியும்.

பேரிச்சம்பழம் விட்டமின் சி, இரும்புச் சத்து, விட்டமின் பி காம்ப்ளக்ஸ் இருப்பதால் தினமும் இரவில் 2 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வருவது நல்லது. கருப்பு எள்ளு மிட்டாய் கடையில் விற்பார்கள் அதை வாங்கி உண்ணலாம். இவற்றின் மூலமும் ரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *