சமையல் குறிப்புவாழ்க்கை முறை

நவராத்திரி : சூப்பரான பச்சைப் பட்டாணி மசாலா

அன்றாடம் சமைக்கும் உணவில் பட்டாணி குழம்பு, தாளித்த பட்டாணி என்று சமைப்போம். நவராத்திரி தினங்களில் அம்மனுக்கு படைப்பதற்காக வேக வைத்த பட்டாணி செய்து நைவேத்தியம் எடுத்து வைத்து விட்டு மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு மட்டும் இந்த பட்டாணி மசாலா தாளித்து கொடுக்கலாம்.

  • நவராத்திரி தினங்களில் பட்டாணி மசாலா செய்து கொடுங்க.
  • ஸ்பைசி பட்டாணி மசாலா.
  • கமகமக்கும் பட்டாணி மசாலா இதன் சுவை கூடும். எவ்வளவு செய்தாலும் உங்களுக்கு மிச்சம் இருக்காது.

பட்டாணி மசாலா

தேவையான பொருட்கள்

கால் கிலோ பட்டாணி, அரை கப் பெரிய வெங்காயம் நறுக்கியது, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கடுகு, ஜீரகம், உப்பு, தேங்காய் எண்ணெய் தாளிப்பதற்கு தேவையான அளவு. மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சத்தூள் தலா ஒரு ஸ்பூன். தண்ணீர், கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு.

செய்முறை விளக்கம்

பட்டாணி முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து விடவும்.

ஊற வைத்த பட்டாணி குக்கரில் பட்டாணி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் வைத்து சிறிது உப்பு சேர்த்து 5 விசில் விட்டு இறக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து சிறிய வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து மிளகாய் தூள் சேர்த்து, மஞ்சத்தூள் ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.

பிறகு வேக வைத்த பட்டாணி சேர்த்து சிறிது உப்பு போட்டு 2 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். விருப்பப்பட்டால் தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். இப்போது சுவையான கமகமக்கும் பட்டாணி மசாலா தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *