செய்திகள்தமிழகம்

திமுக வட்ட செயலாளர் வெட்டிக் கொலை..!

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் திமுக வட்டச் செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்த செல்வம் என்பவர் , அப்பகுதியின் திமுக வட்ட செயலளாரக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் இவர் கொடி கட்டி பறந்து வந்தார். இதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட அவரது மனைவி பெயரில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனையடுத்து வட்ட செயலாளர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராஜாஜி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த மர்ம கும்பல், சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த செல்வம் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, இது தொழில் பகை காரணமான கொலையா..? அல்லது அரசியல் போட்டியா..? என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *