செய்திகள்தமிழகம்

BREAKING: தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. இவை 16-2-2022 முதல் 2-3-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்.

  1. சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும்.
  2. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
  3. இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.
  4. நர்சரி பள்ளிகள் (LKG, UKG) மற்றும் மழைலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools) திறக்க அனுமதியளிக்கப்படுகிறது.

5 பொருட்காட்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகள் பிப்ரவரி 16 முதல் 100% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி.

உணவகங்களிலும் 100% வாடிக்கையாளர்களுடன் செயல்பட வரும் 16ஆம் தேதி முதல் அனுமதி.

கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *