செய்திகள்தமிழகம்

வெடிகுண்டை கடித்த பசு :- சிதைந்த வாய்..!

மேய்ச்சலின் போது நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டின் வாய் சிதைந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அண்ணாநகர் வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (27). இவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து பசு மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று மதன்குமார் தோட்டத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு தனது மாடுகளை விட்டு இருந்தார். பின்னர் மீண்டும் மாலை மாடுகள் வீடு திரும்பியது.

அப்போது ஒரு பசு மாட்டின் வாய் சிதைந்த நிலையில் ரத்தம் சொட்ட, சொட்ட இருந்ததை கண்டு அதிர்சி அடைந்த மாட்டின் உரிமையஆளர், அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாட வனப்பகுதியையொட்டிய இடங்களில் வைக்கப்பட்ட நாட்டுவெடியை மாடு கடித்ததில் வாய் சிதைந்து ரத்த காயங்கள் ஏற்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் வாய் சிதைந்த பசு மாட்டிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் சமூக விரோதிகள் சிலர் காட்டு பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *