செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் கொரோனாவின் நிலவரம் அறிக்கை

சென்னையில் மட்டும் இதுவரை கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,37,732 ஆக உயர்ந்துள்ளன. தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்புக்கு 98 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இதுவரை மொத்தம் 7,516 பேர் உயிரிழந்துள்ளார்கள். சென்னையை பொருத்தவரை நேற்று ஒரே நாளில் மட்டும் 1,025 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் தமிழகத்தில் நேற்று மட்டும் 5,891 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.

ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3,80,063 ஆக உயர்ந்துள்ளன. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,39,959 ஆக உயர்ந்துள்ளன.

நேற்று ஒரே நாளில் 75,829 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பாக தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வந்தன.

இதன்படி நேற்று வெளியிடப்பட்ட தகவலில் ஒரே நாளில் 5,990 பேருக்கு நோய் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டன. தமிழகத்தில் ஒரே நாளில் 5,990 பேருக்கு ஒரு நாள் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு 5,891 பேருக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *