ஆரோக்கியம்சமையல் குறிப்புதேசியம்மருத்துவம்

இதை மட்டும் செய்யாதீர்கள்…பச்சையாக சாப்பிடக்கூடாதா உணவுகள்..?

சமையல் என்பது வேலையல்ல ஒரு கலை. சமையல் குறித்து முக்கிய தகவலை இந்த கட்டுரையில் பார்க்கலம், அதாவது சிலர் காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால், அதன் முழு சத்துக்கள் கிடைக்கும் என்றும், வேகவைத்தோ அல்லது சமைத்து சப்பிடுவதன் மூலம் சத்துக்கள் வீணாக கிழே போவதாக சிலர் நினைக்கிறார்கள். அது தான் தவற்ம் சமைப்பதன் மூலம் காய்கறிகளில் உள்ள கெட்ட அமிலங்கள் வெளியேறுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியான வரிசையைல் பச்சையாக சாப்பிடக் கூடாது உணவுகளை பார்க்கலாம்.

1-முட்டைகள்:

பலர் முட்டையை பச்சையாக சாப்பிட்டால் கட்டு மஸ்தான உடலை பெற என எண்ணிகிறார்கள், ஆனால் முட்டையை பச்சையாக சப்பிட்டால் அது பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக
வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்புகள், காய்ச்சல் மற்றும் செரிமானக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பச்சை முட்டைகளில் காணப்படும் சால்மோனெல்லா என்ற குறிப்பிட்ட பாக்டீரியா தான் இந்த பிரச்சனைகளை ஏற்படுத்துமாம்.

2-பால்:
அதிகபட்ச புரதம், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைப் பெறுவதற்கு பச்சைப் பால் அருந்துவது ஒரு சிறந்த வழி என்று ஒருவர் நினைக்கலாம். இருப்பினும், உணவில் பரவும் நோய்த்தொற்றுகளைத் தூண்டும் நோய்க்கிருமிகளை அகற்ற பாலை லேசான சூட்டிலாவது கொதிக்க வைப்பது நல்லது.

3-ப்ரோக்கோலி:

ப்ரோக்கோலி காய்கறி சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம், இருப்பினும் அதில், இதில், நார்ச்சத்து, தாதுக்கள் ஆகியவை அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த காய்கறியை பச்சையாக சாப்பிடுவது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்றும், அதனால், குறைந்த பட்சம் வறுத்து அல்லது வேகவைத்து உண்பது உடலுக்கு நல்லது. மேலும் வேகவைத்து சாப்பிடுவதால் எளிதில் செரிமானம் ஆகும்.

4-தக்காளி:

தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படுவதுண்டு, ஏனென்றால் ஆப்பிளுக்கு நிகராக அதில் சத்துக்கள் உள்ளன. இருப்பினும் சிலர் இதனை சாலட்டுகளில் பச்சையாக சாப்பிட்டு வருகின்றனர். இது நல்லதல்ல என்றும், இதனை வறுத்தோ, அல்லது வேகவைத்தோ சாப்பிடுவதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கலாம் என்கின்றார்கள்.

5-பசலைக் கீரை:

இரும்பு, கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கீரைகளில் ஒன்று பசலைக் கீரை. இருப்பினும் இந்த கீரையை கடைந்து சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் கீரையில் உள்ள ஆக்ஸாலிக் அமிலம் வெளியேறிவிடும் என்கின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *