செய்திகள்தமிழகம்

மோடிக்கு உதவவே மூன்றாவது அணி..!! காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உடைத்து மோடிக்கு உதவ தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் முயற்சிக்கிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

தேசிய அளவில் மோடியை எதிர்த்து 2014 மற்றும் 2019இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மண்ணைக் கவ்வியது. மேலும் காங்கிரஸ் கட்சியும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து தற்போது அதலபாதாளத்தில் உள்ளது.

மேலும் பாஜக 2014க்கு முன்பு நுழையாத பல மாநிலங்களிலும் தற்போது செல்வாக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பீதியில் உள்ள மாநில கட்சிகள் இனியும் காங்கிரசை நம்பி பயனில்லை என நாடு தழுவிய அளவில் மோடிக்கு எதிராக மிகப்பெரிய மூன்றாவது அணியை அமைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். சில காலம் முன்பு வரை மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த தெலுங்கானா முதல்வர், தெலுங்கானாவில் பாஜகவின் சமீபத்திய எழுச்சி காரணமாக, மூன்றாவது அணியை உருவாக்கி பாஜகவை வீழ்த்த மும்முரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, “பிரதமர் மோடிக்கு எதிரான கூட்டணி அமைக்கும் திட்டம் முதல்வர் கே.சந்திரசேகர் ராவிடம் இல்லை. இதெல்லாம் போலியானது. அவர் பிரதமர் மோடிக்கு உதவவே இதை முயற்சிக்கிறார். ஸ்டாலின், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே போன்ற தலைவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கும் வகிக்கும் நிலையில், இந்த கூட்டணியை உடைத்து மோடிக்கு உதவ கே.சந்திரசேகர் ராவ் முயற்சித்து வருகிறார். இது ஒரு சதி.

உண்மையிலேயே கே.சந்திரசேகர் ராவ் கூட்டணி அமைக்க விரும்பினால் ஆந்திராவில் ஜெகன், நவீன் பட்நாயக் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரிடமும் சென்று பிரதமர் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். அவர் உத்தர பிரதேசத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியை பிரச்சாரம் செய்து போட்டியிட செய்தார். இதனால் சமாஜ்வாடி கட்சி தேர்தலில் தோல்வியடைந்து யோகி மற்றும் பாஜக வெற்றி பெறுவர்.

உண்மையில் மோடிக்கு ஆதரவாக காங்கிரஸை பலவீனப்படுத்தவே சந்திரசேகர் ராவ் முயற்சி செய்கிறார். 2018 தேர்தலுக்கு முன், நரேந்திர மோடிக்கும், காங்கிரசுக்கும் எதிராக ஒரு முன்னணியை துவக்குகிறோம் என கூட்டாட்சி முன்னணி குறித்து சந்திரசேகர் ராவ் பேசினார். எங்கே அந்த முன்னணி? மறுபடியும் கூட்டாட்சி முன்னணி பிரச்சினையை எழுப்ப ஆரம்பித்துள்ளார்.

2000 முதல் 2021 வரையிலான காலத்தில் சந்திரசேகர் ராவின் அரசியல்வாழ்க்கையை பார்த்தால், 2004ல் காங்கிரஸூடனும், 2009ல் சந்திரபாபு நாயுடுவுடனும் இருந்து பின்னர் ஏமாற்றியவர். 2014ல் காங்கிரஸை ஏமாற்றினார். 2018ல் வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பேன் என்று மோடியின் உதவியை பெற்று, அவர்களையும் ஏமாற்றினார்.” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *