செய்திகள்தமிழகம்

ஜெயலலிதாவுக்கு இது தான் ஆச்சு..! மருத்துவர் பரபரப்பு வாக்கு மூலம்..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்ம உள்ளதாக கூறி வந்த நிலையில், தற்போது அப்போலோ மருத்துவர் அளித்துள்ள வாக்கு மூலம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

2017 செப்டம்பர் 25ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து அதே ஆண்டு நவம்பர் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையைத் தொடங்கினார்.

பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அப்போலோ மருத்துவர்கள் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து விசாரணை அஆணையம் காலக்கெடு முடிவடைந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை ஏற்பட்டது மாரடைப்பு தான் என்று அப்பல்லோ மருத்துவர் தெரிவித்திருக்கிறார். ஆறுமுகசாமி ஆணையத்தில் குறுக்கு விசாரணையின் போது அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் பதிலளித்தார். மாரடைப்பு ஏற்பட்டபோது ஜெயலலிதாவுக்கு உயிரை காப்பதற்கான அனைத்து சிகிச்சை முறையும் தரப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இதனையடுத்து ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம் விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை நடத்த உள்ளது என்றும், வரும் 15ம் தேதிக்கு பிறகு சம்மன் அனுப்ப விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *