செய்திகள்தமிழகம்

கல்லூரிகள் திறப்பு குறித்து புதிய அறிவிப்புகள் வெளியாகின

தற்போது தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி கல்லூரிகள் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் விடுதிகள் செயல்படவும் அனுமதி கொடுக்கப்படுவதாக தமிழக முதல்வரால் தெரிவிக்கப்பட்டுள்ளன.

  • கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
  • தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி கல்லூரிகள் திறக்கலாம்.
  • கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் வருகிற 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் போக்குவரத்துக்கள் அனைத்தும் தமிழகத்தில் மூடப்பட்ட நிலையில் இருந்தன. மக்களின் வாழ்வாதாரம் கருதி கொரோனா தொடர்பாக தமிழக அரசு கொடுத்துக் கொண்டுள்ளது. அடுத்த கட்டமாக ஊரடங்கு மீண்டும் நீடிக்கப்பட்டு உத்தரவு வெளியாகியுள்ளது.

கல்லூரிகளில் வழிகாட்டும் நெறிமுறை

கல்லூரிகளில் செயல்படவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை மீன்வளம், கால்நடை சார்ந்த அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் வருகிற 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டது.

இளநிலை, முதுநிலை வகுப்புகளும் திறக்கலாம். புதிதாக மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து விடுதிகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *