சினிமா

சினிமா ஃபீல்டுக்கு வந்த சோதனை.. தியேட்டர்கள் அமெரிக்காவில் மூடப்படுகிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே தியேட்டர்களில் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதால் உலக பட இயக்குனர்கள் கவலை அடைந்துள்ளார்கள். ஜேம்ஸ் பாண்ட் படமான ‘நோ டைம் டூ டை’ படத்தின் வெளியீடு ஏப்ரல் 2021க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

ஹாலிவுட்டில் தயாரான மிகப் பெரிய படங்களும் ரிலீஸ் செய்யப் படாமல் தியேட்டர் திறப்புக்காக காத்திருக்கின்றன. மார்ச் மாத மத்தியிலிருந்து இந்த தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. ரீகல் சினிமா தான் அமெரிக்காவின் மிகப்பெரிய சினிமா தியேட்டர் நிறுவனமாக உள்ளன. அமெரிக்காவின் 42 மாகாணங்களில் 543 தியேட்டர்களில் 7155 ஸ்கிரீன்கள் உள்ளன. அமெரிக்காவில் உள்ள தியேட்டர்களை தற்காலிகமாக மூடுவது பற்றி ஆலோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

சினிமா தியேட்டர்களை மூடும் முடிவு என்பது தற்காலிகமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. நாங்கள் முடிவு எடுத்ததும் அனைத்து ஊழியர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அறிவிப்போம் என்று சினி வேர்ல்ட் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : தியேட்டர்கள் மூடப்பட்ட போதிலும் 80 சதவிகிதம் பங்குகள் உயர்வு

50 ரீகல் தியேட்டர்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் செயல்படத் தொடங்கும் என்றும் ரீகல் நிறுவனத்தின் பிரிட்டிஷ் தாய் நிறுவனமான சினி வேர்ல்ட் அறிவித்துள்ளன. கொரோனா தொற்றால் காலவரையின்றி தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஈடுசெய்ய முடியாத பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளன.

அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய சினிமா தியேட்டர் நிறுவனமான ரீகல் சினிமா நாடு முழுவதும் உள்ள 543 தியேட்டர்களை மூடும் நிலைக்கு வந்துள்ளன. அமெரிக்காவில் மூடப்படும் 543 தியேட்டர்கள் எங்கே செல்லும்? இந்த சினிமா என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ப. பாண்டி படம் பாடல் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *