செய்திகள்

சீனாவும் இந்தியாவும் கூட்டாளிகள்..சீனா

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல்களைத் தூண்டி விட்டு, பிராந்தியத்தில் பிளவை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சி செய்கின்றன என சீன வெளியுறவுத் துறை பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

சீன-இந்திய உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் சில பின்னடைவுகளைச் சந்தித்துள்ளன; இது இரு நாடுகளுக்கும் மற்றும் மக்களின் அடிப்படை நலன்களுக்கும் எந்தவொரு பயனும் இல்லை என்றும், வரலாற்றில் எஞ்சியிருக்கும் பிராந்திய பிரச்சினைகளை, நமது இருதரப்பு நலன்களை ஒட்டுமொத்தமாக பாதிக்கச் செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

மேலும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தூண்டாமல், வளர்ச்சி வாய்ப்புகளை ஒருவருக்கொருவர் வழங்கி ஒருமித்த உறவை நாம் கடைபிடிக்க வேண்டும் என்றும், சீனாவும் இந்தியாவும் பரஸ்பர வெற்றியின் கூட்டாளிகளாகக் கருதப்பட வேண்டுமே தவிர, பரஸ்பர எதிரிகளாக இருக்கக் கூடாது என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *