Jallikattu bulls

குழந்தை பாக்கியம் கிடைக்க இந்த மந்திரத்தை சொன்னால் போதும்…..

தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் என்பது வரப்பிரசாதமாகும் குடும்ப வாழ்க்கை முழுமையாக என்பது அவர்களுக்கு என்ற விருப்பத்தை வரும்போதுதான்… சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் சொர்க்கமாக மாற வேண்டுமென்றால் , முழுமை அடைய அவர்கள் ஏங்குவது குழந்தைக்காக மட்டுமே…

அந்த காலத்திலெல்லாம் அனைவரும் பத்து பன்னிரண்டு குழந்தைகளை பெற்று எந்த செல்வம் இல்லாவிட்டாலும் குழந்தைச் செல்வத்தைப் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தனர் .ஆனால் தற்போது கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தாலும் குழந்தை இல்லாமல் தவித்து வரும் பல தம்பதிகளும் நாம் பார்த்துள்ளோம்..

இதற்கு அவர்கள் முன் ஜென்மத்தில் செய்த பாவமே காரணமாகும். எனவே உங்கள் கர்ம வினையை நீக்கி அந்த அழகிய கிருஷ்ணனே உங்களுக்கு குழந்தையாக பிறக்க இந்த இரண்டு மந்திரங்கள் உங்களுக்கு மிக உதவியாக இருக்கும் மனதார கிருஷ்ணரை நினைத்து இந்த மந்திரத்தை கோரி வழிபட்டால் கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்….

மந்திரம் 1: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளெம் தேவகி ஸுத கோவிந்தா: வாசுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம் கிருஷ்ணா த்வாமஹம் சரணம் கத

மந்திரம் 2:
தேவ தேவ ஜகந்நாதா
கோத்ர வ்ருத்திகர ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம்
ஆயுஷ்பந்தம் யசஸ்விமம்

மந்திரத்தின் பொருள்


முதல் மந்திரத்தில் தேவகியின் புத்திரனாக இருக்கக்கூடிய வசுதேவர் உலகத்துக்கெல்லாம் பதியாக இருக்கின்றார். தங்களை சரணம் அடைகின்றோம், எங்களுக்கு ஒரு நல்ல குழந்தை பாக்கியத்தை அருளுமாறு கேட்டு கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவது மந்திரத்தில் தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக ஜகத்தினை ஆளும் தேவனே எம் குலம் விருத்தி அடைய, எங்களுக்கு நல்ல தீர்க்காயுளுடன் கூடிய நல்ல குணாதிசயங்கள் பெற்றுள்ள குழந்தையை அருளுமாறு வேண்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மந்திரத்தை பூஜை அறையில் கிருஷ்ணன் படத்திற்கு முன்பு தம்பதியராக அமர்ந்து தினமும் மூன்று முறை உச்சரித்து வர விரைவிலேயே அந்த கிருஷ்ணனே உங்களுக்கு மகனாக பிறப்பான் என்பது நம்பிக்கை. செய்த பாவங்கள் தீரவும், கர்மவினை பயன்களுக்கு பரிகாரம் செய்யவும் உங்களால் முடிந்த மட்டும் பெற்றோர் இல்லாத அனாதை குழந்தைகளுக்கு உதவி செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *