ஆரோக்கியம்ஆலோசனைசெய்திகள்தமிழகம்வாழ்வியல்

மக்களை பாதுகாக்க வழிகள்?ஆராயும் ஆலோசகர்கள்!

தமிழ்நாட்டில் மத்திய உள்துறை இணை செயலாளர் அக்னிஹோத்ரி மற்றும் அவருடன் ஏழு பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு வந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு இழப்புகளை குறிவைத்து மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க இந்த குழுவானது வருகை தந்திருக்கின்றது.மத்திய குழுவினர் இரண்டு நாட்கள் வெள்ளைப் பகுதிகளை பார்வையிட்டு தங்களது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர் .

  • மத்திய ஆய்வு குழு இன்று சென்னையில் ஆய்வு நடத்திவருகின்றது.
  • மத்திய குழுக்கள் இரண்டாக பிரிந்து தமிழ்நாட்டு வெள்ள பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றன.
  • பாதிப்புகளை பொருத்து நிவாரணம் வழங்கபடும் என்று தகவல்கள் கிடைக்கின்றன.

சில பாதிக்கப்பட்ட பகுதிகள்:

சென்னை பகுதியில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் நேரம் குறித்து வைத்து பார்வையிட்டு ஏற்பட்டுள்ள சேதங்களை அறிக்கையாக மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளனர். இதன் மூலம் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்ய மத்திய அரசு நிவாரண உதவி வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தொற்று பரவும் அபாயம்

புயல் வெள்ள பாதிப்புகள் நீர் வரத்து அதிகமாகி சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகள் ஈரத்தன்மையுடன் காணப்படுகின்றன. இதனால் கொசுக்கள் உற்பத்தியாவது அதிகரிக்கலாம் தொற்று நோய்கள் உருவாவதற்கு இது காரணமாகும் இதற்கு தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மேலும் படிக்க : SSC மத்திய அரசாங்க வேலை வாய்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *