சினிமாசெய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்

Captain vijaykanth: சாகும்போது விஜயகாந்த் கேட்க விரும்பிய பாடல் சினேகன் கூறிய வார்த்தை

கேப்டன் விஜயகாந்த் குறித்து கவிஞர் சினேகன் கூறிய உருக்கமான வரிகள் . நான் சாகும் வரை இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருப்பேன் என விஜயகாந்த் அவர்கள் கூறியது என் மனதில் இப்பொழுதும் ஓடிக்கொண்டே உள்ளது.

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று நம்மை விட்டு பிரிந்து காலமானார். இவரின் இழப்பு தமிழக மக்களுக்கு மிகப்பெரும் இழப்பாக இருக்கும்.

சினிமாவிலிலும் அரசியலிலும் கொடி கட்டி பறந்த விஜயகாந்த் தனது அரசியல் வாழ்க்கையை 1993 ஆம் ஆண்டு முதல் தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்தார்.அதன் பயனாக 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்னும் புதிய கட்சியை தொடங்கி அதன் நிறுவனத் தலைவராக கேப்டன் அவர்கள் இருந்து வந்தார். சட்டமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் தனது அரசியல் வாழ்க்கையில் பல கோடி மக்களுக்கு உதவி வந்த மக்களின் நாயகன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இன்று காலை 28.12.2023 இயற்கை எய்தினார்.

இந்நிலையில் அவர் சாகும்வரை ஒரு பாடலை நான் கேட்டுக் கொண்டே இருப்பேன் என்று சொன்ன நினைவுகளை கவிஞர் சினேகன் தனது உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். நமது கேப்டன் சாகும்வரை கேட்பேன் என்று கூறிய பாடல் 2002இல் வெளிவந்த ராஜ்ஜியம் திரைப்படத்தில்

“கோட்டை முதல் குமரி வரை கட்டு ஒரு மாலை”

வெளியான இப்பாடலை எனது ஆயுட்காலம் முடியும் வரை கேட்டுக் கொண்டே இருப்பேன் அவ்வளவு அர்த்தமுள்ள பாடல் எனக்கு மிகப் பிடித்த பாடலும் கூட என்று விஜயகாந்த் கூறியதை அழுது கொண்டே விஜயகாந்த் அவர்களின் இழப்பை தாங்க முடியாத சினேகன் கூறிய பதிவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *