Videosஆன்மிகம்ஆலோசனை

குரு வாரத்தில் ஜகத்குரு அளிக்கும் ஆசிர்வாதம்

பண்டிகை விசேஷம்னு வந்தா பெரியவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது ஒரு வழக்கம். நமக்கு ஆசீர்வாதம்னா கைல வாங்குற காசு தான் ஞாபகம் வரும். அவங்க மனத்திலிருந்து வாழ்த்தும் சொல் நமக்கு செவிக்கு எட்டாதவாறு வாழ்த்துவார்கள் அப்பதான் அந்த வலிக்குமா இதுவும் ஒரு ஐதிகமா சொல்றாங்க.

வாழ்க வளமுடன், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க, என்றும் நலமுடன் வாழ்க இப்படி பல ஆசீர்வாத வார்த்தைகள் இருந்தாலும் ஆயுஷ்மான் பவ சௌமிய அப்படிங்கிற வார்த்தை பெரிய பெரிய மனிதர்கள் ஆசிர்வாததுக்காக பயன்படும் வார்த்தை.

பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க. நிறைய பேர் 16 குழந்தைகள் பெற்று வாழணும்னு ஒரு அர்த்தம் சொல்லுவாங்க. ஆனால் இந்த வாழ்த்துக்கு பதினாறு செல்வங்களும் பெற்று நன்றாக வாழவும் அப்படிங்கிறது தான் அர்த்தம்.

அதேபோல ஆயுஷ்மான் பவ சௌமிய அப்படிங்கிற வாழ்த்து சொல்லுக்கு என்ன உள்ளர்த்தம்னு ஒரு குட்டி கதை மூலமா இந்த காணொளியை பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *