சினிமாசின்னத்திரைசெய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்

Bigboss 7 day 7 update: பில்டப் பிரதீப் அட்டகாசம் ஸ்ட்ரைகால் வாடும் பிக்பாஸ் ஹவுஸ்மெட்ஸ்

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பிரபல போட்டியாளர்கள் இடையே பெரும் வாக்குவாதம் சண்டைகள் கலவரங்களாக நடைபெற்று வந்தன அது இதற்கு முன்பு நாம் பார்த்தோம். ஆனால் இன்று அது மாறி தேவையற்ற பேச்சுக்கள் புரிதல்கள், வீட்டுக்காரருடைய பகை அதிகமாகின்றது சமைக்க மறுக்கின்றனர். உணவு சரியில்லை என்று குறை கூறியதாலும் வேலை செய்ய முடியவில்லை என்றும் அதிகமாக ஒரு ஆள் தேவை என்றும் பேசி பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் இருக்கும் போட்டியாளர்களிடையே வாதம் செய்கின்றனர்

எந்த பேச்சுக்கும் இங்கே மதிப்பில்லை

விசித்திரா, யுவேந்திரன் வீட்டில் பெரியவர்கள் இருவரும் தங்களது வயது அனுபவங்கள் ஆகியவற்றை முறையாக உணர்ந்து பக்குவமாக பேசி அவர்களை சமாதானப்படுத்த முயன்றும் எந்த பேச்சுக்கும் சமாதானத்திற்கும் ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருக்கும் பில்டப் பிரதீப் விஷ்ணு மற்றும் மாயா அக்ஷயா ஆகியோர் தயாராக இல்லை. இது மேலும் சிக்கலை உண்டு செய்து இருக்கின்றது. பிரதீப் பேச்சுக்கள் ஆடியன்ஸ் மத்தியில் தேவையற்ற வெறுப்பை ஊட்டி உள்ளது. இந்த வாரம் பிரதீப் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் பிக் பாஸ் நெட் கார்டு கொடுப்பார் என்று ஆடியன்ஸ் மத்தியில் பேச்சுக்களும் எழுதுகின்றனர். விஷ்ணு தேவையற்ற வாதங்களை செய்து தனக்கான ஆடியன்சை அட்டிரேக்ட் செய்ய முயற்சி செய்கின்றார் .அத்துடன் மாயாவும் தன் பங்கிற்கு பலம் இறங்கி விட்டார்.

பசியால் வாடும் பிக்பாஸ் வீடு

இன்றைய ஸ்ட்ரைக்கால் பசியில் வாடும் பிக் பாஸ் வீட்டினர். இருக்கும் ஸ்னாக்ஸை எடுத்து பகிர்ந்து கொண்டு சாப்பிட்டு வருகின்றனர். சரவணன் கேப்டன்ஷியில் திறம்பட செயல்பட முடியாமல் தவிக்கின்றார். அனைவரது பேச்சுக்கும் தனக்குத் தெரிந்த முறையில் ரியாக்ட் செய்கின்றார் அது அவரை பலவீனப்படுத்துகின்றது. தேவையற்ற விமர்சனங்களையும் கேட்க வைக்கின்றது. ஆனாலும் பிக் பாஸ் வீட்டில் தானே இறங்கி சமைப்பதாக சரவணன் களத்தில் இறங்கினார். உண்மையில் அது நல்ல ஒரு முடிவில் தான் இதனை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜோவிகா பிரதீப் இடையே வெடிக்கும் சரவெடி

அடுத்ததாக பில்டப் பிரதீப் , ஜோவிகா இடையே வாக்குவாதங்கள் பலமாக ஏற்பட்டது.நாங்கள் சாப்பாட்டை வீணடிக்கின்றோம் என்பது வேறு நீ சமைத்துக் கொடுக்க தான் அங்க இருக்கிறாய் என்று ஜோதிகா எடுத்துச் சொல்ல, நாங்கள் அடிமைகள் அல்ல என்று பிரதீப் வாதிடுகிறார். அது கிடக்க அடுத்தது யுகேந்திரன் இடையில் புகுந்து என்ன சொல்கிறோம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.நாங்கள் சாப்பாடு சரியாக இல்லை என்று சொல்லவில்லை என்கிறார். விசித்திராவும் கடந்த வாரம் நாங்கள் சமைத்துக் கொடுத்தோமே நாங்கள் பாத்திரம் கழுவினோமே என்று அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துச் சொன்னார். ஆனாலும் எந்த ஒரு தீர்வும் இன்று கிடைக்கவில்லை . அடிதடியாக இல்லாமல் அதற்கு முன் வரை பிக் பாஸ் வீட்டில் வாக்குவாத போர் அதிகமாக நடைபெறுகின்றது பாவம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் பெரும் பசியால் கிடைப்பதை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறனர்.

சோம்பேறித்தனம் தான் இத்தனைக்கும் காரணம்

உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றால் அடிப்படை அக்கறை கூட இல்லாமல் வேலை செய்ய சோம்பேறித்தனம் பட்டு ஸ்மால் ஹவுஸ் வீட்டில் இருப்பவர்கள் மனிதாபிமானம் அற்ற முறையில் கொடுத்து மளிகை பொருட்களை வீணடித்து தேவையற்ற பேச்சுக்கள் பேசி அவர்களது பொறுப்பின்மையை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த வாரம் கமலஹாசன் இவர்களுக்கு வச்சு செய்வார் என்று தெரிகின்றது. முட்டாப் பயலுகளா ஆண்டவர் சொல்கிறார் ஒழுக்கமா நடந்துக்கோங்க இல்லைன்னா உங்களுக்கு ரெட் கார்டு தான்,ரெடியா இருங்க .பில்டப் பிரதீப் மற்றும் அமைதியா பேசுங்க ஜோவிகா அதோட விசித்ரா, யுகேந்தரனுக்கு சபாஷ் சொல்லணும் மற்றும் ஒருத்தன் உன்னை பத்தி குறை சொல்றான் நீ பெரிய ஆள் என்பதை நிக்சன் உணர்ந்து கொள்ள வேண்டும் .மற்றவர்கள் கருத்துக்கு நாம் எப்போதும் செவிசாய்க்க வேண்டிய அவசியமில்லை தைரியமாக செயல்பட வேண்டியது உங்கள் கடமை. எப்பொழுது என்று ஆண்டவர் பேசுவார் என்று நம்பப்படுகின்றது பார்ப்போம் என்ன நடக்கிறது என்று பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு தலையில் கொட்டு எத்தனை எல்லோ கார்டுகள், ரெட் காடுகள் யார் உள்ளே யார் வெளியே என்பதை எல்லாம் இந்த வாரம் இரண்டு நாட்களும் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *