ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்வாழ்வியல்

தீபத்தில் கோடிஸ்வர யோகம் கிடைக்க…

லக்ஷ்மி தேவியின் பரிபூரண அருள் பெற்று நமது கஷ்டம் ,கடன் தொல்லை, தீரா பிரச்சனைகள், குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் சண்டைகள், துன்பம் போன்ற அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி நலமான வாழ்வு மற்றும் கோடீஸ்வர யோகம் கிடைக்க லட்சுமி தேவிக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை தோறும் இந்த முறையில் தீபம் ஏற்றி வர அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.

தீபம் ஏற்றும் முறை

தீபம் ஏற்றுவதற்கு அளவான பித்தளை அல்லது வெள்ளித் தட்டை லஷ்மி தேவிக்கு மிகவும் பிடித்தமான வாசனை திரவியங்கள் (பன்னீர்,ஜவ்வாது) சந்தனம் மற்றும் குங்குமத்தால் அலங்கரித்து கொள்ளவும் .

பின்பு பெரிய அகல்விளக்கு ஒன்று மற்றும் சிறிய அகல் விளக்கு இரண்டு எடுத்துக் கொண்டு மங்களம் நிறைந்த மஞ்சள் எடுத்து அகல் விளக்கு முழுவதும் பூசி சுபம் தரும் குங்குமத்தால் அலங்கரித்து கொள்ளவும்.

அதன்பின் அலங்கரித்த தட்டில் பெரிய அகல் விளக்கை வைத்து அதில் உப்பை நிறைத்து அதன்மேல் முன்பு நாம் அலங்கரித்து வைத்த இரு அகல் விளக்குகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து லக்ஷ்மி தேவிக்கு உகந்த நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரியால் தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்தை காலை மாலை ஆகிய இருவேளைகளிலும் ஏற்றலாம் பிரம்மமுகூர்த்தத்தில் ஏற்றுவது மிகவும் உகந்தது தொடர்ந்து இந்த உப்பு தீபத்தை ஏற்றி வழிபட்டு வர வீட்டில் செல்வம் பெருகும் கடன் தொல்லை நீங்கி செல்வம் செழிக்கும். குடும்பத்தில் எதிர்மறையான எண்ணங்கள் நீங்கி மங்களம் உண்டாகும்….

மேலும் படிக்க : ஓமன குட்டி போல பொலிவு பெற இதெல்லாம் சாப்பிடுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *