ஆன்மிகம்ஆலோசனையூடியூபெர்ஸ்

Kandasasti benifits 2023: மகா கந்த சஷ்டி விரதம் இருப்பதால் இவ்வளவு நன்மையா???

முருகன் மேல் பற்று கொண்ட பக்தர்கள் மேற்கொள்ளும் கடுமையான விரதங்களில் ஒன்று கந்த சஷ்டி விரதமாகும். வருடத்தில் ஒருமுறை வரக்கூடிய மகா கந்த சஷ்டி விரதம் அதாவது கந்த சஷ்டி விழா என்று அழைக்கக்கூடிய 7 நாட்கள் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்திற்கு மறுநாளில் இருந்து விரதம் இருந்து முருகனின் சூரசம்ஹாரம் முடிந்து அடுத்த நாள் முருகன் வள்ளி தெய்வானையுடன் திருக்கல்யாணம் முடிந்ததும் விரதத்தை முடித்து வழிபடுவர். இவ்வாறு மகா கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வதால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். மகா கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மகா கந்த சஷ்டி விரதத்தின் பயன்கள்

  • ஏழு நாட்கள் மகா கந்த சஷ்டி விரதம் மேற்கொண்டு முருகனை வழிபடுபவர்களுக்கு நீண்ட நாள் நிறைவேறாத காரியம் நிறைவேறும்.
  • நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் வேண்டி வாடும் தம்பதிகளுக்கு அடுத்த வருடம் கந்த சஷ்டிக்குள் அந்த முருகனே வந்து உங்களுக்கு குழந்தையாக பிறப்பார்.
  • திருமணம் ஆகாத பெண்கள் விரதம் மேற்கொள்ளும் பொழுது உங்கள் மனதிற்கு பிடித்த உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற கணவர் அமைவார். உங்களுக்கு கிடைத்த வாழ்க்கை துணையால் நீங்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருப்பீர்கள்.
  • நீண்ட நாள் தொழில் தொடங்க நினைத்தவர்களுக்கு கந்த சஷ்டி விரதம் இருந்து தொழிலை தொடங்கினால் தொழில் சமூகமாக நடைபெறும்.
  • தீராத கடன் தொல்லையால் அவதிப்படும் நபர்கள் வீட்டில் பணம் கஷ்டம் நீங்கி கடன் தொல்லை ஒழிந்து மன நிம்மதியுடன் செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள்.
  • நீண்ட நாள் உடலில் பலவித தீராத நோய்களால் அவதிபடுபவர்களுக்கு தீராத நோய்களும் தீர்ந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும். நோயால் பல ஆண்டுகாலம் வாடியவர்கள் இனி ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
  • மகா கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வதால் உடலும் மனமும் புத்துணவு ஏற்படும் உடல் ஆரோக்கியத்துடன் மன நிம்மதியுடன் இருப்பீர்கள்.
  • கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் வீட்டில் தீய சக்திகள் நீங்கி வீட்டில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருப்பீர்கள்.
  • தம்பதிகள் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பொழுது அவர்களுக்குள் ஒற்றுமை காதல் அதிகரித்து சிறந்த தம்பதிகளாக வாழ்வீர்கள்.

இவ்வாறு வருடத்தில் ஒரு முறை மகா கந்த சஷ்டி விரதம் ஏழு நாட்கள் இருந்து விரதம் இருப்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் முருகனின் துணையோடு மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். முருகப்பெருமானின் பரிபூரண அருளும் உங்களுக்கு கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *