ஆன்மிகம்ஆலோசனை

காகத்திற்கு உணவிடுங்கள் பிறகு நடக்கும் அதிசயங்களை உணர்வீர்கள்

காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தரும். காக்கையில் பரிமளம், அண்டங்காக்கை, நூபுரம், மணி காக்கை என சில வகைகள் இருக்கின்றன. காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்த பறவைகளிடம் காணமுடியாது. எமதர்மராஜன் வடிவமெடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவதாக சொல்லப்பட்டு உள்ளன.

அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வார். எமதர்மனும், சனிபகவானும் சகோதரர்கள். காக்கைக்கு உணவிடுதல் ஒரேசமயத்தில் இருவரையும் திருப்தியடைய செய்யலாம். காகம் வீட்டின் முன்பு நின்று கரைந்தால் நல்ல செய்தி வரும் அல்லது விருந்தினர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை.

காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்றும் கூறுவர். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு. வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும். காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான் எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெற்று மகிழ்வுடன் வாழ முடியும்.

அதிகாலையில் எழுந்து கரைதல். உணவை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணுதல். பிறர் காணாத வகையில் ஜோடி சேர்தல். மாலையிலும் குளித்தல். ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காகங்களும் ஒன்றுகூடி கரைதல் என்பது காக்கை இனத்தின் பொதுவான குணங்கள் ஆகும்.

இவற்றுள் ஒரு காக்கை இறந்துவிட்டால் அனைத்து காகங்களும் கூடிநின்று கரைதல் என்பது அஞ்சலி செலுத்துவதற்கு சமமாக கருதப்பட்டு வருகின்றன. உங்களின் உள்ளுணர்வால் ஏற்படுவதால் அல்லது உண்மையிலேயே பித்ருக்களின் ஆசியா என்பது அதிசயம் தான். ஆனால் தினமும் காலையில் காகத்திற்கு சாதம் வைத்து வருவதால் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள் விபத்து போன்றவற்றை உங்களை நெருங்கவே செய்யாது.

செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப் பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள் தள்ளிப்போகும். புத்திரபாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும் உங்கள் நியாயமான கோரிக்கைகளையும் தங்குதடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது உங்கள் முன்னோர் வழிபாடுதான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் முன்னோர்களுக்கு நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவில்லை. மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் கூறியுள்ளனர். இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *