மருத்துவம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்..!! ஏன் சொன்னார்கள்…??

இயற்கை நமக்கு கிடைத்த வர பிரசாதம் என்று சொல்வார்கள். ஆமாங்க. அப்படி பட்ட இயற்கையா வளர கூடிய அருகம்புல் பற்றித்தான் இந்த பகுதியில் தெரிந்து கொள்ள போகிறோம். வாதம், பித்தம், நெஞ்சுவலி, வயிறு எரிச்சல், உடல் வறட்சி, மூல சூடு, தலை வெடிப்பு, நீர்க்கடுப்பு ஆகியவை தீரும்.

அருகம்புல்

அரை கிலோ அருகம் வேறை ஒன்று இரண்டாக அரைத்து அதில் நான்கு லிட்டர் தண்ணிர் விட்டு கொதிக்க வைத்து வற்றியதும் அந்த சாறை நல்லெண்ணெயில் கலந்து, சர்க்கரை வள்ளி கிழங்கு,அமுக்கிரா கிழங்கு தலா பத்து கிராம் பால் விட்டு அரைத்து அடுப்பில் காய்ச்சி வடித்து எடுத்த எண்ணெய்யை வாரம் மூன்று முறை தலையில் தேய்த்து ஊற விட்டு குளிக்க மேற்குறித்த நோய்கள் குணமாகும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் தலா 25 கிராம் குமாரி வேர், நன்னாரி வேர், அருகம்புல், ஆவாரம் பட்டை சேர்த்து 100 மிலி கொதித்து வற்றியதும், நாள் ஒன்றுக்கு மூன்று வேளை குடித்து வர மிகையான தாகமும் தணியும். தகுந்த சீதா மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று, அருகம்புல் நன்மையை தெரிந்து கொள்ளவும்.

அரை லிட்டர் தண்ணீரில் அருகம் வேர் 10 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம், சிறுகீரை வேர் 10 கிராம், காய்ச்சி கால் லிட்டர் வத்தியதும் பால் கல்கண்டு கலந்து பருகினால் , மருந்து வீரியத்தால் ஏற்படும் வாய், வயிறு புண், பல் சீழ் ஆகியவை குணமாகும். அரை லிட்டர் நல்லெண்ணெயில் சீரகம் 25 கி,மிளகு 50 கி, அருகம்புல் 50 கி இடித்து எண்ணெயில் கலந்து கடும் வெயிலில் வைத்து, 45 நாட்கள் தலையில் தடவி வர கண் நோய்கள் தீரும்.

தோல் நோய்கள் குணமாகும்

உடல் வறட்சி, மேக அனல், சிறுநீருடன் ரத்தம் வெளியேறுதல், சிறுநீர் தாரையில் உள்ள புண்ணால் நீர் கடுப்பு, வெள்ளை குணமாக கீழாநெல்லி மூலம் 10 கி, அருகம்புல் 20 கி, தயிரில் கலந்து காலையில் குடிக்க வேண்டும். அடங்காத தோல் நோய், வேனல் கட்டி, சேற்று புண், அரிப்பு, வேர்க்குரு, தோல் நோய், தேமல், சொறி சிரங்கு குணமாக அருகம்புல் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி ஊற விட்டு குளிக்கவும்.ரத்த மூலம் குணமாக 15 கி அருகம்புல்லை அரைத்து பாலில் கலந்து குடித்து வரலாம்.

மாதவிடாய் சிக்கல், வெப்பம் தணிய, காது, மூக்கு,ஆசனவாய் ரத்தம் ஒழுக்கு நிற்க 500 மிலி தண்ணீரில் 20 கி அருகம்புல், 20 கி மாதுளை இலை சேர்த்து 250 மில்லி அளவிற்கு காய்ச்சி மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை 30 மில்லி குடித்து வரலாம். மேலும் காமம் பெருக்கியாகவும், தாகம் தணிப்பானாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், நோய் நீக்கும் உடல் தேற்றியாகவும் இருக்கிறது.

அருகம்புல் வளர்ப்புகள்

நோயாளிகளுக்கு மிகசிறந்த மருந்தாக பயன்படுகிறது. புல்லை மட்டும் இரையாக உண்ணும் விலங்குகளுக்கு குடல் நோய் வருவதில்லை. மாறாக புல்லால் குடல் புண்கள் குணமடைகிறது. இது சல்லிவேர் முடிச்சுகள் மூலமும், விதைகளின் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது. குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய, தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட வெளியிகளிலும் வளரும். ஒரு புல் வகையாகும். .அருகம்புல் எல்லா வித மண்வளத்திலும் வளரும்.

மேலும் படிக்க

கிராம மக்களின் சாத்துக்குடி புளிப்பான நார்த்தங்காய்…!!

One thought on “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்..!! ஏன் சொன்னார்கள்…??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *