செய்திகள்தமிழகம்

பீப் பாடல் விவகாரம் : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!

பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு எதிரான கோவை போலீஸார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு நடிகர் சிம்பு பெண்கள் குறித்து ஆபாசமாக பாடியதாக கூறிய பீப் சாங் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து இந்த பாடலை உருவாக்கியதாக சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு எதிராக தமிழ்நாட்டில் பெண்கள் அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதனையடுத்து சிம்பு மற்றும் அனிருத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தனக்கு எதிராக உள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு எதிரான கோவை போலீஸார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.

அத்துடன் கோவை நீதிமன்ற விசாரணை அறிக்கையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் வழக்கு ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *