ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறை

நோயின்றி வாழ வேண்டுமா..!!

நொறுங்கத் தின்றால் நூறு வயது. நம் உடலைப் பேணுவதற்காக நாம் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் உள்ளது. இவற்றையெல்லாம் நாம் கடைப்பிடித்து வருவதால் ஆரோக்கியமாக பெருவாழ்வு வாழ முடியும். நீர் உடலுக்குத் தேவை என்பதால் தினமும் அதிகபட்சமாக 8 டம்ளர் தண்ணீராவது அருந்த வேண்டும்.

உணவு இடைவேளையில் நறுக்குத் தீனிகளை தவிர்த்து விடுங்கள். தினமும் இரண்டு முறை பிரார்த்தனை செய்யுங்கள். இதனால் மனம் புத்துணர்வு பெறும். தினமும் 20 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். இது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். வாரத்தில் ஒரு நாள் திரவ உணவுடன் உண்ணா நோன்பு இருப்பது உடல் உறுப்புகளுக்கு நன்மை விளைவிக்கும்.

மலச்சிக்கலின்றி பார்த்துக் கொண்டாலே பல நோய்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். இதற்காக உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை எடுக்க வேண்டும். உருளைக் கிழங்கு, பீட்ரூட், கீரை வகைகள், கேரட், பீன்ஸ் அன்றாட உணவுகளில் அதிகம் உட்கொள்ள வேண்டும். நமது நாட்டு காய்கறிகள் எல்லாமே உடலுக்கு உகந்ததாக இருக்க கூடியவை.

கீரை, காய்கறிகள், பழங்கள் அதிகம் உட்கொண்டு, அரிசி உணவை குறைப்பது நலம் தரும். வாரத்தில் சில நாட்களுக்கு கோதுமை, ராகி, கம்பு போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதால், மிக நலமாக வாழ முடியும். பழ வகைகளை உண்ணும் போது அதன் சுவைக்கு ஏற்றவாறு பிரித்து உண்ண வேண்டும்.

அதாவது புளிப்பு பழங்கள் ஆரஞ்சு, எழுமிச்சை, தனியாகவும். இனிப்பு பழங்களான பல வகைகளை தனியாகவும் உட்கொள்ளுதல் வேண்டும். காய்கறிகளில் இந்த பாகுபாடு இல்லை, என்பதால் மாவுச்சத்து பொருட்களுடன், புரதச் சத்து பொருட்கள் சேர்த்து சாப்பிடலாம். இது முதுபெரும் மருத்துவ நிபுணர் கூறிய கருத்துகளாகும்.

ஒரு நாளை இரவு உணவு 8 மணிக்குள் முடித்து விட வேண்டும். நீங்கள் படுக்கைக்கு போகும் போது நீங்கள் உண்ட உணவு நன்கு ஜீரணமாகி இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். பசித்த பின்பே உணவு உண்ணும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவு வகைகள், வதக்கிய உணவு பண்டங்கள், மசாலா அதிகமுள்ள பொருட்கள், இவற்றைத் தவிர்த்து காப்பி, மதுபானம், புகை, மாமிசம் அவசியம் தவிர்த்து உண்ணலாம்.

வயிறு முட்ட சாப்பிடாமல், சிறிது உண்ண வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போதே, சாப்பாட்டு மேசையை விட்டு எழுந்து விடுவது நலம். வெள்ளைச் சர்க்கரையை ஒழித்து பல ரசாயனப் பொருட்கள் சேராத, குறிப்பாக சோடியம் பாஸ்பேட், சூப்பர் பாஸ்பேட், முதலிய வேண்டாத ரசாயன பொருட்கள் எல்லாம் கலக்காத சுத்தமான கரும்புச் சர்க்கரையை, பனை வெல்லத்தை, கருப்பட்டியை எடுத்துக் கொள்வதால் உடல் நலத்துக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.

கரும்பு வெல்லம், கரும்பு சர்க்கரையும் நல்ல நிறம் சேர்க்கப்படும். இந்த ரசாயனங்கள் உடலுக்கு ஊறு செய்வதுடன், கண்பார்வைக்கு நல்ல நிறம் கொடுப்பதை தவிர சுவையும் இல்லை. உடல்நலத்திற்கு குணமும் இல்லை. ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்நாளில் இதை கடைபிடித்தாலே நோயின்றி வாழ முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *