சினிமாசின்னத்திரையூடியூபெர்ஸ்

2வது திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட ஜெனி உடைந்து போன செழியன் …

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நமது பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியின் அப்பா ஜோசப் சொன்ன ஒரு வார்த்தையால் நொறுங்கிப் போன செழியன் இதனால் அவர் சந்தித்த பிரச்சனைகள், அதன் பின் அவருக்கு நேர்ந்த சோகங்கள் ஏராளம்.

கோபியிடம் ஜோசப் கூறிய அந்த வார்த்தை

ஹோட்டலில் கோபியை பார்த்து ஜோசப் பொங்கி எழுந்து வழக்கம் போல் தீட்ட ஆரம்பித்து விட்டார் அதன் பின் தனது பெண் ஜெனிக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் செழியனிடமிருந்து விவாகரத்து ஆனதும் உடனடியாக உங்கள் கண்முன்னே ஜெனிக்கு எப்படி இரண்டாவது திருமணம் செய்கிறேன் என பாருங்கள் என்று சவால் விட்டு செல்கிறார் இதனை கேட்டவுடன் கோபி ஆடிப் போய் விடுகிறார்.

ஜேனிக்கு 2வது திருமணம் நொறுங்கிப் போன செழியன்

ஜோசப் சொன்ன விஷயத்தை கோபி வீட்டில் உள்ள அனைவரிடமும் சோகமாக சொல்கிறார் அதைக் கேட்டதும் வீடே சிலையாக நின்று விட்டது. தாத்தாவும் இந்த முறை கோபப்பட்டு அவரை பண்றது ரொம்ப தப்பு என திட்டுகிறார் பாட்டி அவர் பொண்ணு நல்லா வாழனும்னு அவருக்கு ஆசையே இல்லையா என கொந்தளிக்கிறார். இதையெல்லாம் கேட்டு மனம் உடைந்த செழியன் அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியில் சென்று விடுகிறார்.

ஜெனியிடம் நியாயம் கேட்கும் செழியன்

நேராக ஜெனி வீட்டிற்கு சென்ற செழியன் என்ன ஜெனி நீ இரண்டாவது திருமணம் செய்யப் போகிறாயா என்னை மன்னிக்கவே மாட்டாயா? நான் சொல்றத ஒரு முறை கேள் என வாக்குவாதம் செய்கிறார் ஆனால் ஜெனி மௌனம் காத்த கிளி போல் அமைதியாக நிற்கிறார் இதனால் கோவம் அடைந்த ஜோசப் உன்னை எப்பவும் நம்பவே மாட்டேன் என செழியனை மாறி மாறி அடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளி விடுகிறார் இப்பவும் ஜெனி அமைதியாகவே நிற்கிறார் இனி ஜெனி எடுக்க போகும் முடிவு என்ன இரண்டாவது திருமணத்திற்கு ஒத்துக் கொள்வாரா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *