சினிமாசின்னத்திரையூடியூபெர்ஸ்

Bakiyalakahmi serial update : எழிலுக்கு Good news சொன்ன அமிர்தா….சந்தோஷத்தில் எழில்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஒரு எதார்த்தமான குடும்ப பெண்ணின் கதையை மையப்படுத்தி இருப்பதால் அனைவரும் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இன்றைய ட்ரெண்டிங்கில் எழில் அமிர்தாவின் காதல் கதை தான் அனைவரிடத்திலும் பேசப்பட்டு வருகிறது.

பழனிச்சாமி மேல் என்ன காதலா பாக்யா

கோபி வேலைக்கு போகாமல் குடும்பத்தை ஏமாற்றிக்கொண்டு அங்குமிங்கும் சுற்றிக்கொண்டு இருக்கிறார். தனது நண்பருடன் சேர்ந்து ஹோட்டலில் பேசிக் கொண்டிருந்தபோது பாக்கியாவும் பழனிச்சாமியும் அதை ஹோட்டலுக்கு வருகின்றனர் இருவரும் பேசிவிட்டு சொல்லும்போது கோபி பாக்கியாவை வழிமுறைக்கு என்ன பாக்யா உனக்கும் அவனுக்கும் காதலா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா என நேரடியாகவே பாக்யாவிடம் கேட்கிறார். உடனே பாக்யா நான் அப்படி கல்யாணம் பண்ணனும் என்று நினைத்தால் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு தான் பண்ணுவேன்.

நான் அவரை கல்யாணம் பண்ணலாம் உங்களுக்கு என்ன என பதிலடி கொடுத்து பாக்யா சென்று விட்டார்.

எழில் – அமிர்தா காதல்

கணேசிடமிருந்து அமிர்தாவை எழில் எப்படியோ காப்பாற்றி விட்டார். இனி கணேஷ் என் கதை முடிந்து விட்டது. ஆனால் அவரால் எழில் அமிர்தா இடையே காதல் ஆரம்பம் ஆகிவிட்டது. இதுவரை இவர்கள் இருவருக்கும் ரொமான்ஸ் சீன் என்று காட்டியதில்லை ஆனால் இன்று எபிசோடில் இருவரும் மாறி மாறி தனது காதலை வெளிப்படுத்தி ஒரே ரொமான்ஸில் உள்ளனர்.

இவர்களின் காதல் கதையை பார்க்கும் பொழுதே அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *