சினிமாசின்னத்திரையூடியூபெர்ஸ்

Bakiyalakahmi Today: ராதிகா கேட்ட ஒரே வார்த்தை.. வாயடைத்துப் போன பழனிச்சாமி

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி சீரியல் ஆக டிஆர்பி இல் முதலிடம் வகித்த பெண்களின் மனதிற்கு பிடித்த சீரியலாக வலம் வருவது பாக்கியலட்சுமி. இந்த நாடகத்தில் பாக்யா பெரும் இன்னல்களை தாண்டி இப்பொழுது ஒரு நிலைமைக்கு வந்துள்ளார். பொருட்காட்சி நடக்குமா? நடக்காதா என பல கேள்விகள் இருந்து வந்த நிலையில் இப்பொழுது வெற்றிகரமாக பொருட்காட்சி தொடங்கி கேண்டினில் வகை வகையான சாப்பாடுகளுடன் அசத்தி வருகிறார்.

பாக்யாவின் கேண்டினுக்கு நேரடியாக வருகை தந்த அமைச்சர் உணவுகளை சாப்பிட்டு விட்டு அவரை பாராட்டி விட்டு சென்றுள்ளார். அடுத்த முறை வரும்பொழுது நீங்கள் இன்னும் பெரிய இடத்தில் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறிய சென்றுள்ளார். ஈஸ்வரி, கோபி என அனைவரும் பாக்யாவிற்கு எதிராக பொருட்காட்சியில் கேண்டினை நடத்த வேண்டாம் என்று கூறியபோதும் பாக்யா அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இதற்காக மிகவும் தனது உழைப்பை கொட்டினார். அதற்கு பரிசாக இப்பொழுது அமைச்சரே வாழ்த்தும் அளவிற்கு கேண்டினை நடத்தி வருகிறார்.

பொருட்காட்சிக்கு வருகை தரும் ராதிகா

பாக்கியாவின் கேண்டினுக்கு அனைவரும் வந்து விட்டனர் இந்நிலையில் வரவே மாட்டார் என்று நினைத்த ராதிகா திடீரென கேண்டினுக்கு வந்து பாக்யாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ராதிகாவின் வருகையை பார்த்த பாக்யா மிகவும் சந்தோஷப்பட்டு ஓடிச் சென்று ராதிகாவை வரவேற்கிறார். ராதிகாவிடம் நீங்கள் வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி என சிரித்த முகத்துடன் கூறுகிறார். பழனிச்சாமி இடமும் பாக்யா ராதிகாவை பற்றி நல்ல முறையாக புகழ்ந்து கூறுகிறார்.

இப்பொழுது வேண்டுமானால் நாங்கள் சண்டை போட்டு கொண்டிருக்கலாம் எங்களுக்குள் எவ்வளவோ பிரச்சனைகள் நடந்து கொண்டு உள்ளது, எனது வாழ்க்கையை அவர் வாழ்ந்து கொண்டு இருக்கலாம் ஆனால் என் வாழ்க்கை எது என்று முதலில் புரிய வைத்தது ராதிகா தான். ராதிகாவின் முயற்சியால் தான் நான் இந்த இடத்திற்கு வந்து நிற்கிறேன் என ராதிகாவை பற்றி புகழ்ந்து தள்ளுகிறார்.

பழனிச்சாமிக்கு ஷாக் கொடுத்த ராதிகா

பழனிச்சாமி அடுத்து ராதிகாவிடம் சென்று பேசப் போகிறார் ராதிகாவும் அவரிடம் நன்றாக பேசுகிறார் என் நிலையில் பழனிச்சாமி ராதிகாவிடம் பாக்யாவை பற்றி கேட்கிறார் அப்பொழுது ராதிகாவும் பாக்கியா எப்பொழுதும் எனக்கு ஒரு தோழியாகவும் அக்காவும் தான் இருந்திருக்கிறார் நான் கஷ்டத்தில் இருக்கும் பொழுது எனக்கு உதவியாக இருந்திருக்கிறார். ஆனால் இப்பொழுது தான் எங்களின் வாழ்க்கை நிறைய மாறிவிட்டது ஆனால் எப்பவும் அவங்க மேல எனக்கு பாசம் இருக்கும் என கூறுகிறார்.

இதோடு நிறுத்தாத ராதிகா பழனிச்சாமிடம் நீங்களும் பாக்கியாவும் நல்ல முறையில் ஒருவருக்கு உறவு புரிந்து கொண்டு பழகுகிறீர்கள் எப்படி இருக்கும் பொழுது நீங்கள் ஏன் பாக்யாவை கல்யாணம் பண்ணிக்க கூடாது என கேட்க என்ன பேசுவது என்று தெரியாமல் வாயடைத்து போய் பழனிச்சாமி நிற்கிறார். இனி அவர் கூறப்போகும் பதில் என்ன என்பதை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *