சினிமா பாடல்கள்

ஐயா படம் பாடல் வரிகள் ஒரு வார்த்தை…

ஐயா 2005 -ம் ஆண்டு வெளிந்த காதல், அதிரடி திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் ஹரி இயக்க, சரத்குமார், நயன்தாரா, நெப்போலியன், வடிவேலு, பிரகாஷ்ராஜ், லட்சுமி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

பாடல் வரிகள்:

ஒரு வார்த்த கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன் ..

ஒரு வார்த்த கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன் ..
மண மாலை ஒன்னை பூ பூவ பூத்திருந்தேன் …
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன் …

சூரியன சூரியன சுருக்கு பையில் ………
நான் அள்ளி வர, அள்ளி வர ஆசப்பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் புட்டிகிட்டேன்
தண்ணிகுள்ள தான் நட்ட தாமர கொடி,
தெப்ப குளத்தையே குடிச்சிருச்சு…….

ஒரு வார்தை சொல்ல ஒரு வருசம் தயங்கி நின்னேன்
அந்த பார்வ பார்க்க முடியமா நான் ஒதுங்கி நின்னேன்…

ஊர்க்குள்ளே ஓடும் தெருவில், பாத தடங்கள் ஆயிரம் இருக்கும்
நீ நடந்த சுவடுகள் இருந்தால் எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்..

இதயத்தை தட்டி தட்டி பாத்துபுட்ட,
அது தெறக்கல என்றதுமே ஒடச்சுபுட்ட ..

மேலும் படிக்க : திகைக்க வைக்கும் போட்டோ…யார் தெரியுமா..?

நீ கெடைக்க வெண்டும் என்று துண்டு சீட்ட எழுதி போட்டேன்
பேச்சி அம்மன் கோவில் சாமி, பேப்பர் சாமி ஆனது என்ன!!….

கண்ணுக்குள்ள ஓடிய உன்ன தொரத்த, மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச
மனசுக்குள்ள ஒளிஞ்சுடும் உன்ன வெரட்ட, உசுருக்குள் நீ மெல்ல
நொளஞ்ச ..

ஓ நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனதைய்யா

ஒரு வார்தை சொல்ல ஒரு வருசம் தயங்கி நின்னேன்
அந்த பார்வ பார்க்க முடியமா நான் ஒதுங்கி நின்னேன்…

அடுத்த வீட்டு கல்யாணத்தின் பத்திரிக்கை பார்க்கும் போது,
நமது பேரை மணமக்கள் ஆக மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன் ..

இது வரை என்னக்குள்ள இரும்பு நெஞ்சு,
ஆது இன்று முதல் ஆனது ஏலவம் பஞ்சு…

கட்ட பொம்மன் உருவம் போல உன்னை வரைந்து மறைத்தே வைத்தேன்,
தேசபற்று ஒவியம் என்று வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட ..

ஆணை கட்டி போலவே இருக்கு மனசு நீ தொட்டு ஒடஞ்சது என்ன
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம் பூ பட்டு சரிஞ்சது என்ன ..

வேப்ப மரம் சுத்தி வந்தேன், அரச மரமும் பூத்ததைய்யா..
…..

ஒரு வார்த்த கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
ஒரு வார்தை சொல்ல ஒரு வருசம் தயங்கி நின்னேன்

இந்த பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன் ..
அந்த பார்வ பார்க்க முடியமா நான் ஒதுங்கி நின்னேன்…

சூரியன சூரியன சுருக்கு பையில் ………
நான் அள்ளி வர, அள்ளி வர ஆசப்பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் புட்டிகிட்டேன்
தண்ணிகுள்ள தான் நட்ட தாமர கொடி,
தெப்ப குளத்தையே குடிச்சிருச்சு…….

மேலும் படிக்க : கரகாட்டக்காரன் படம் பாடல் வரிகள் பாட்டாலே புத்தி சொன்னார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *