விளையாட்டு

தோனி பெறவேண்டிய விருதைப் பற்றி காங்கிரஸ் எம்எல்ஏ ட்விட்டரில் கோரிக்கை

இந்திய கிரிக்கெட்டின் பெயரை உச்சத்திற்கு கொண்டு சென்ற டோனிக்கு நாட்டின் உயரிய விருது வழங்குவதில் தவறில்லை என்று பிசி சர்மா தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபால் மாநகரின் காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் பிசி.சர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகேந்திர சிங் தோனி இந்த நாட்டின் விலை மதிப்பில்லாத பொக்கிஷம்.

இவர் இந்தியாவின் வெற்றியை அனைத்து நாடுகளிலும் நிலைநாட்டி இருக்கிறார். இவருக்கு உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சனிக்கிழமை அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து அவரது சமூக வலைத்தளம் மூலமாக வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. விளையாட்டு வீரர்கள் அரசியல் பிரமுகர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் தோனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டுமென்று போபால் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பிசி சர்மா கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *