செய்திகள்தேசியம்

ஜூலை 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து துறை அறிவிப்பு

இந்தியாவில் குறைந்த கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் உடைய எண்ணிக்கை 5 லட்சத்திற்கு மேல் சென்று விட்டது. மகாராஷ்டிரா தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் குறைவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பல்வேறு மாநிலங்களில் பொது முடக்கம் தீவிரமாக அமலில் இருப்பதால் ஏற்கனவே ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் வெளிநாட்டு விமான சேவைகள் வரும் ஜூலை 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனினும் சரக்கு விமான போக்குவரத்து இருக்கும் சிறப்பு விமான போக்குவரத்து இருக்கும். எந்த தடையும் விதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக யூகிக்க கூடிய வகையில் இருந்தால் ஜூலை மாதத்தில் மீண்டும் பயணிகள் விமான சேவையை தொடங்குவது குறித்து இந்தியா முடிவெடுக்கும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

சர்வதேச விமான போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வியை அடிக்கடி எழுப்புவதாக கூறினார். எல்லாம் சரியாக இருந்தால் ஆகஸ்ட், செப்டம்பரில் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறாக இந்தியாவில் இருந்து புறப்படும் மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் வரும் ஜூலை 15ஆம் தேதி வரை வைத்து செய்யப்படுவது பற்றி விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *