ஆன்மிகம்ஆலோசனை

அஷ்ட பைரவ காயத்திரி மந்திரம்

பயத்தைப் போக்கி முன்னேற்றத்தை பெற கால பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபட வேண்டுதல் நிறைவேறும். அஷ்ட பைரவர்கள் எட்டு விதமாகத் தோன்றி பூமியில் வணங்கப்படுகின்றனர். எட்டுத் திசைகளிலும் தோன்றி ஸ்ரீ கால பைரவ மூர்த்தி ஒளியை உண்டாக்கினார்.

  • பைரவர் எட்டு விதமாகத் தோன்றி பூமியில் வணங்கப்படுகின்றனர்.
  • அஷ்ட பைரவருக்கு உரிய காயத்திரி மந்திரங்களை படிப்பது மிகவும் நல்லது.
  • ராகு காலம் மற்றும் கேது காலங்களில் பாராயணம் செய்ய மிகவும் நல்லது.

அஷ்ட பைரவர்கள்

  1. சொர்ணாகர்ஷண பைரவர்
  2. கால பைரவர்
  3. சண்ட பைரவர்
  4. ருரு பைரவர்
  5. உன்மத்த பைரவர்
  6. அசிதாங்க பைரவர்
  7. குரோதன பைரவர்
  8. சம்ஹார பைரவர் & பீக்ஷன பைரவர், கபால பைரவர்.

1.சொர்ணாகர்ஷண பைரவர்-பைரவி (ஞாயிறு-சூரியனின்)

ஓம் பைரவாய வித்மஹே-ஆகர்ஷணாய தீமஹி
தன்னோ சொர்ணபைரவ ப்ரசோதயாத்
ஓம் த்ரிபுரதயை ச வித்மஹே-பைரவ்யை ச தீமஹி
தன்னோ பைரவி ப்ரசோதயாத்

2.கால பைரவர்-இந்திராணி (திங்கள்-சந்திரனின்)

ஓம் கால தண்டாய வித்மஹே-வஜ்ர வீராயதீமஹி
தன்னோ கபால பைரவ ப்ரசோதயாத்
ஓம் கஜத்வஜாயை வித்மஹே-வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ இந்திராணி ப்ரசோதயாத்

3.சண்ட பைரவர்-கௌமாரி (செவ்வாயின்)

ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே-மஹாவீராய தீமஹி
தன்னோ சண்ட பைரவ ப்ரசோதயாத்
ஓம் சிகித்வஜாயை வித்மஹே-வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரி ப்ரசோதயாத்

4.உன்மத்த பைரவர் – ஸ்ரீ வராஹி (புதன்)

ஓம் மஹா மந்த்ராய வித்மஹே-வராஹி மனோகராய தீமஹி
தன்னோ உன்மத்தபைரவ ப்ரசோதயாத்
ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே-தண்ட ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்

5.அசிதாங்க பைரவர் – பிராம்ஹி (வியாழன்-குரு)

ஓம் ஞான தேவாய வித்மஹே-வித்யா ராஜாய தீமஹி
தன்னோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்
ஓம் ஹம்ஷத் வஜாயை வித்மஹே-கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தன்னோ பிராம்ஹி ப்ரசோதயாத்

6.ருரு பைரவர்-மஹேஸ்வரி (வெள்ளி-சுக்கிரன்)

ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே-டங்கேஷாய தீமஹி
தன்னோ ருருபைரவ ப்ரசோதயாத்
ஓம் வ்ருஷத் வஜாயை வித்மஹே-ம்ருக ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ரௌத்ரி ப்ரசோதயாத்

7.குரோதன பைரவர்-வைஷ்ணவி (சனி)

ஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே-லட்சுமி தராய தீமஹி
தன்னோ குரோதன பைரவ ப்ரசோதயாத்
ஓம் தாக்ஷ்யத் வஜாயை வித்மஹே-சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்

8.சம்ஹார பைரவர் -சண்டீ (ராகு)

ஓம் மங்ளேஷாய வித்மஹே-சண்டிகாப்ரியாய தீமஹி
தன்னோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்
ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே-மஹாதேவி ச தீமஹி
தன்னோ சண்டி ப்ரசோதயாத்

பீஷண பைரவர்-சாமுண்டி (கேது)

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே-ஸ்வானுக்ராய தீமஹி
தன்னோ பீஷணபைரவ ப்ரசோதயாத்
ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே-சூலஹஸ்தாயை தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்

என எட்டு பைரவர் மட்டுமின்றி ஆதிசைவர்கள் 64 விதமான பைரவர்களையும் வணங்கி வந்துள்ளனர் என்று புராணங்கள் கூறுகின்றன. பைரவருக்கு உரிய காயத்திரி மந்திரங்களை அந்தந்த கிழமைகளில் படிப்பது மிகவும் நல்லது. ராகு, கேது மட்டும் அந்தந்த கிழமைகளில் ராகு காலம் மற்றும் கேது காலங்களில் பாராயணம் செய்ய மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *