செய்திகள்தேசியம்

ஆந்திர மாநிலத்தில் மக்களை பாதுகாக்க அதிரடி திட்டங்கள்

ஆந்திர மாநிலத்தில் அதிகரிக்கும் நாளுக்கு நாள் கொரோனா பெருகிக் கொண்டிருக்கின்றது. ஆந்திர மாநிலம் அவற்றிலிருந்து முற்றிலுமாக விலகவில்லை. நேற்று மட்டும் கொரோனா பாதிப்புனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 9 ஆயிரத்து 927 பேர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொடர்பான நடவடிக்கைகளை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திறம்பட செய்து வருகின்றார். அவர் ஆந்திரா மாநிலம் முழுவதும் வெகுவிரைவில் பரிசோதனைகளை செய்து முடிக்க மக்களை பாதுகாக்க அதிரடி திட்டங்களை தீட்டினார்.

ஆனால் ஆந்திராவில் இன்னும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 9 ஆயிரத்து 927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 10,000 பேரை நடுங்கும் அளவிற்கு கொரோனா பாதிப்பு தீயாக பரவி வருகின்றது.

ஆந்திர மாநிலத்தில் இதுவரை 3 லட்சத்து 71 ஆயிரத்து 639 பேர் குறைவினால் பாதித்து சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று மட்டும் 92 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழக்கின்றனர். இதுவரை ஆந்திராவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3460 ஆகும்.

ஆந்திராவில் குணமடைந்து வீடு திரும்பிய மக்கள் 2 லட்சத்து 78 ஆயிரம் பேர் இருப்பார்கள். 89 ஆயிரம் பேருக்கு மேல் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்தால் மக்கள் நிலைமை கடினமாகிவிடும் என்று ஆந்திரப்பிரதேசம் அரசுக்கு தெரிகின்றது. அதன் படி தொடர்ந்து ஆந்திரப் பிரதேச அரசு கொரோனா பாதிப்பு பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரிக்குமே தவிர குறையாது என்று தெரிகின்றது. அரசு முழுமையாக இது குறித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறைக்கும் என்று நம்பப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *