ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

அம்மனின் திருவடியை சரணடைய உதவும் மந்திரம்

அன்னையின் அருளை பெறுவதற்கு நாம் பணத்தை கொட்டியோ கோவில் கோவிலாக சென்று நமது ஆன்மீக தன்மையை மற்றவர்களுக்காக நாம் வெளியில் காட்டிக்கொள்வது ஆகியவற்றால் பெற முடியாது.

இருந்த இடத்திலிருந்து கொண்டே சம்பாதிப்பது வேறு எங்கும் போய் பெற முடியாதது மற்றவர்களால் அபகரிக்க முடியாதது இந்த உலகத்தில் பக்தி ஒன்றுதான் மகனே! இந்த வாக்கியம் அன்னையின் அருள் வாக்கு ஆகும். பக்தி என்பது குறித்து இந்த வரிகளை பல உண்மைகளை சொல்ல வேண்டும் பக்தி என்றால் என்ன அதை எப்படி பெற முடியும் என்பதை உணர முடியும்.

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள அன்பை நாம் பாசம் என்று கூறுகிறோம் அதை போல் நண்பர்களுக்கிடையே உள்ள அன்பை நட்பு என்று கூறுகிறோம் கணவன் மனைவி இருவருக்கிடையே உள்ள அன்பை காதல் என்று அழைக்கிறோம் தெய்வத்திடம் வைக்கின்ற அன்பை பக்தி என்கிறோம் தெய்வத்தின் மீது கொண்டுள்ள காதலே, தெய்வீக சிந்தனையுடன் இறைவன் மீது கொண்டுள்ள தெய்வீக அன்பே பக்தி என்று கூறுகிறது நாரத சூத்திரம்.

இறைவனை நாம் எவ்வாறு அடையலாம், இறைவனை அடையும் வழிகள் என்ன என்பது நமக்கு தெளிவாக புரிந்திருக்கும். இதுபோல அன்னையை அடைவதற்கு அவருக்கு உரிய மந்திரமும் உள்ளது அதை நாம் தினமும் கூறி வரும் பொழுது அன்னையின் திருவடியை எளிதில் அடையலாம். அன்னையின் அருளை முழுமையாக பெற உதவும் அன்னையின் மந்திரத்தை நீங்களும் தெரிந்து பயன்பெறுவீர்..

ஓம் சக்தியே ! பராசக்தியே ! ஓம் சக்தியே ! ஆதிபராசக்தியே ! ஓம் சக்தியே ! மருவூர் அரசியே ! ஓம் சக்தியே ! ஓம் விநாயகா ! ஓம் சக்தியே ! ஓம் காமாட்சியே ! ஓம் சக்தியே ! ஓம் பங்காரு காமாட்சியே !

இந்த மந்திரத்தை தினமும் நீங்கள் பூஜை அறையில் அம்மன் விளக்கேற்றி வைத்துவிட்டு தெய்வ படத்தை அலங்கரித்து மனமுருகி அம்மன் முன் அமர்ந்து இந்த மந்திரத்தை கூறி அம்மனை வழிபட்டால் அம்மனின் முழு அருளும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்வில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் நீங்கள் வேண்டும் வரத்தை அம்மன் அள்ளிக் கொடுப்பாள்.

மேலும் படிக்க : நவராத்திரி கொலு! தொடர்ந்து 9 நாட்கள் கடைப்பிடிக்க..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *