செய்திகள்தமிழகம்

கனமழை காரணமாக அமராவதி அணை நீர்வரத்து அதிகரிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக அமராவதி அணை நீர்வரத்து அதிகரிப்பு. உடுமலை அருகே அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து நான்காயிரத்திற்கும் மேலும் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

அமராவதி அணை

  • அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தன.
  • அணையின் நீர்மட்டம் 89 அடியை கடந்துள்ளன.
  • உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

அணையின் நீர்மட்டம்

அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அணையின் நீர்மட்டம் 89 அடியை கடந்துள்ளன.

அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணை பாதுகாப்புக்காக 9 கண் மதகுகள் வழியாக ஆற்றுகளில் இருந்து 3867 கன அடியும், அமராவதி பிரதான கால்வாயில் 400 கன அடி நீரும், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

உபரி நீர் வெளியேற்றம்

மலை அதிகரித்தால் நீர்வரத்து அதிகரிக்கும். இதனால் உபரி நீர் வெளியேற்றமும் அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

எனவே கரையோர கிராம மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். மீன் பிடிக்க ஆற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டாம். அணைப்பகுதியில் 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *