கல்விசெய்திகள்தமிழகம்

ஏஐசிடிஇ அரியர்ஸ் தேர்ச்சி வழங்குவது குறித்து கடிதம்

கலை மற்றும் அறிவியல் எம்சிஏ படிப்புகள் உடன் பிஇ அரியர்ஸ் மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்ததற்கு ஏஐசிடிஇ தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரியர்ஸ் ரத்தை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடந்துள்ளது.

ஏஐசிடிஇ எழுதிய கடிதம் தமிழக அரசுக்கு வரவில்லை என்றும் அக்கடிதத்தை வெளியிட வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசின் அரியர் ரத்துக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ கடிதம் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ள நிலையில் அதிர்ச்சி அளிப்பதாக கூறப்படுகிறது. அரியர் தேர்வு ரத்து ஏற்க முடியாது என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளது பொறியியல் மாணவர்களுக்கு அரியர்ஸ் தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியுள்ளார்.

தமிழக அரசின் அரியர் ரத்துக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *