சினிமாசெய்திகள்தமிழகம்

நடிகர் விஜய் மன்ற இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை

நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கம் நிர்வாகிகளை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றார். விஜய் தனது தந்தை தொடங்கிய அரசியல் கட்சியில் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  • விஜய் அரசியல் பேச்சுவார்த்தை தொடர்பாக தன் தந்தை தொடங்கிய கட்சிப் பற்றி தனக்குத் தெரியாது என்கின்றார்.
  • அரசியல் குறித்து தன் தந்தை முடிவை தான் ஏற்கவில்லை ரசிகர்களளும் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.
  • இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை செய்து வருகின்றார்.

தனது இயக்க நிர்வாகிகள் விஜயுடன் கலந்து பேசி அவர்கள் கருத்துக்களையும் மேலும் அவர்களது ஆலோசனைகளையும் கேட்க இருக்கின்றார். இந்த நிலையில் அவருக்கு என ஒரு நல்ல பெயர் இருந்து வருகின்றது. அதனைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள அரசியல் மாதிரியான காலங்களில் இறங்குவது விஜய்க்கு விருப்பம் இல்லை என விஜய் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் இதற்கு முன்பு எஸ்,ஏ சந்திரசேகர் பேசிய பல அரசியல் தொடர்பான பேச்சுக்களை கவனித்திருப்பார். ஆனால் அப்பொழுது எல்லாம் இவர் அமைதியாக இருந்திருக்கின்றார் என ஊடகங்கள் பேசுகின்றன.

கடந்த 2 நாட்களுக்கு விஜய் தவறான படியில் இருப்பதாகக் கருத்தினை எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஊடகத்தினர் கேள்விக்கு விஜய் தந்தை பதில் தெரிவிக்கவில்லை என்றும் தகவல்கள் கிடைக்கின்றன.

ஒருவேளை இந்த அரசியல் கட்சி நாடகமானது விஜயின் அடுத்தப் படத்திற்கான வெளியீட்டை சுமுக செய்யும் நாடகமாக இருக்குமோ என்றும் ஒரு சிலத் தரப்பில் பேசப்படுகின்றன.

விஜய் பெரும்பாலான நேரத்தில் தான் அமைதியாக இருந்தார். அவ அப்பொழுதே அவர் அது குறித்து மறுப்புத் தெரிவிக்கவில்லை ஆனால் தற்பொழுது பகிரங்கமாக மறுப்புத் தெரிவித்திருக்கின்ரார்.

விஜய் மனைவி காரணமாக இருக்க கூடும் என்ற பேச்சும் இருந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *