சினிமா

சந்தோஷத்தில் திளைக்கும் நாக்கு முக்க நாயகன் நகுல்

பாய்ஸ் படத்தில் சப்பியா குண்டா சூப்பரா வந்த நகுலுக்கும் அவங்க மனைவி ஸ்ருதி பாஸ்கருக்கும் குட்டி தேவதை பிறந்து இருக்காங்க. பேபி குல்பினு செல்லமா அழைக்கிற பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில முழ்கி இருக்காங்க.

கணவன் மனைவி இருவருக்குள் ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் மிகப்பெரிய பரிசு குழந்தை. அந்தப் பரிசைப் பெற்ற மகிழ்ச்சிக்கு வார்த்தைகளே இல்லை. இந்த மகிழ்ச்சிக்கு வார்த்தை கொடுத்தால் எவ்வாறு இருக்கும் என்ற சிறிய உரையாடல் (கதை அல்ல நிஜம்).

இன்ஸ்டாகிராம்

ஸ்ருதி பாஸ்கர் தன்னோட இன்ஸ்டகிராம் பேரா ‘ஸ்ருபி’-னு வச்சிருக்காங்க அந்த பேஜ்ல இன்னிக்கி மனம் நிறைய உணர்வுகளோடு வார்த்தைகளை பகிர்ந்து இருக்காங்க.

சூப்பரோ சூப்பர்! நகுல்-ஸ்ருபி இணைந்து குல்பி ஆயிடிச்சா.

‘எங்களோடு சின்ன குழந்தை இந்த உலகத்துக்கு வந்து ஒரு வாரம் ஆச்சுனு என்னால நம்பவே முடியல. நான் எல்லா விஷயங்களையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் பெண் அதேபோல் மற்றவர்களையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள சொல்வேன். பொதுவாக ஆண்கள் வீட்டு வேலை செய்வதும் தந்தை ஸ்தானத்தில் இருந்து செய்யக்கூடிய வேலைகளும் குறிப்பிட்டு நகுல் செய்யும் வேலைகளை பாராட்டியே ஆக வேண்டும். திருமணமான நாள் முதல் எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார் நகுல். ஒன்றல்ல இரண்டல்ல எல்லா விஷயங்களுக்கும் என் ஆழ் மனது சிந்தனைகளை நம்பி ஆதரவு கொடுத்து வருகிறார். சென்னையில் இருந்து ஹைதராபாத் பயணத்திற்கு 4 பூனைகளை எனக்காக உடன் அழைத்து வந்தார். கருத்தரிப்பின் மூன்றாவது டிரைமிஸ்டர் என்று சொல்லப் படும் கடைசி மூன்று மாதங்கள் முதல் லேபர் அறை வரை நகுல் தனி மனிதராக எனக்கு ஆதரவு கொடுத்து என்னுடன் பயணித்து வருகிறார். நான் கூறியவாரே எவ்வாறு எங்கு நான் பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த செயலை நகுல் செய்துள்ளார். அவர் இல்லாமல் நான் என்ன செய்திருப்பேன் என்று தெரியவில்லை. என்னைப் போல் நம் மகளும் நீ இல்லாமல் இருக்க மாட்டாள். அவள் பிறந்த உடனேவே தந்தையின் மகளாக இருப்பாள் என்பதை நான் அறிந்தேன். தூக்கமில்லாத இந்த ஒரு வாரம் வேகமாக ஓடியதற்கு காரணம் நீ (நகுல்) சூப்பர் டாட்.

நாங்கள் எப்போதும் அறிந்ததை விடவும், நாங்கள் எப்போதும் காண்பிப்பதை விடவும் நாங்கள் உன்னை நேசிக்கிறோம்.’

இதனை நகுல் தன் பக்கத்தில் பகிர்ந்து தன் மனைவி தனக்காக கூறிய வார்த்தைகளுக்கு தான் உணருவதை வார்த்தையாக கூறியுள்ளார்.

‘குடும்பம்! நான் ஒரு அழகான இளவரசியின் தந்தை.

நன்றி மாம்மி (ஸ்ருதி பாஸ்கர்).

என்னை எப்போதும் ஒரு சூப்பர் ஹீரோவாக உணர வைப்பவள் நீ.

நான் செய்தது கடலின் ஒரு துளி. அனைத்தையும் செய்தவள் நீ. நாம் பெற்றோர் ஆக முடிவெடுத்தது முதல் இந்தப் பயணம் சந்தோஷமாக அமைய நீ செய்த ஆராய்ச்சி என அனைத்தும் என்னை ஊக்குவித்தது. நான் எவ்வளவு பெருமையாக உணர்கிறேன் என்பதை நீ அறிய மாட்டாய். அன்பு பொருந்திய, தைரியமான, தனித்துவமான மனிதராக திகழுகிறாய் என்பதை நான் அறிவேன். ஆனால் நம் குழந்தையை பிரசவித்த போது நீ அனுபவித்த ஆழ்நிலை! அந்தத் தாய்மை! அந்த சக்தி! நான் எதை செய்ய வேண்டுமோ அதை செய்ய பாக்கியம் பெற்று இருக்கேன் மாம்மி.”

ஹாஹா! என்ன ஒரு ஜோடி கணவனை பாராட்டும் மனைவி பதிலுக்கு மனைவியை பாராட்டும் கணவன். மனைவிகிட்டேருந்து பாராட்டு வாங்கணும்னா வீட்டுவேலை கண்டிப்பா செய்ய வேண்டும் நோட் பண்ணிக்கோங்க கணவர்களே. மக்களே கண்ணு படாம இவர்களை வாழ்த்திடுங்க. வாழ்க வளமுடன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *