அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்
வழிவழியாக அன்பர்கள் இந்த அந்தாதியை ஓதி அன்னையின் அருளைப் பெற்று வருகின்றனர்.
இந்த அந்தாதிக்குக் கண்ணதாசன் ஒரு மிக எளிய உரையை இனிய தமிழில் வழங்கியுள்ளார்.

பாடல் வரிகள்:
38: பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்–
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.
பாடல் விளக்கம்:
என் அன்னை அபிராமி பவளக்கொடி போலும் சிவந்த வாயை உடையவள். குளிர்ச்சி தரும் முத்துப்பல் சிரிப்பழகி, அது மட்டுமா? எம் ஈசன் சங்கரனின் தவத்தைக் குலைத்தவள். எப்படி? உடுக்கை போலும் இடை நோகும்படியுள்ள இணைந்த முலைகளால்! அப்படிப்பட்டவளைப் பணிந்தால் தேவர் உலகமே கிடைக்கும். ஆகவே அவளைப் பணியுங்கள்.