ஆன்மிகம்

அபிராமி அந்தாதி பாடல் மற்றும் விளக்கம்

அபிராமி அன்னையின் கருனை உள்ளம் பற்றி இப்பாடலில் புகழ்ந்து துதிக்கின்றனர். இப்பாடல் படிப்பதன் மூலம் ஏழு ஜென்ம பாவம் நீங்கும்.

பாடல் வரிகள்:

32: ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.

பாடல் விளக்கம்:

அபிராமித்தாயே! எந்தன் ஈசன் இடப்பாகத்தில் தானொரு பகுதியாக அமைந்தவளே! அம்மா! நான் கொடிய ஆசையென்னும் துயரக் கடலில் மூழ்கி இரக்கமற்ற எமனின் பாச வலையில் சிக்கியிருந்தேன். அத் தருணத்தில் பாவியாகிய என்னை மணம் பொருந்திய உன்னுடைய பாதத் தாமரையே வலிய வந்து என்னை ஆட்கொண்டது! தாயே! நின் அரும்பெரும் கருணையை என்னென்று உரைப்பேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *