ஆன்மிகம்ஆலோசனை

ஆன்மீக தகவல்களில் முக்கிய பரிகாரங்கள்

ஆரோக்கியமான உடல் இருந்தால் மட்டுமே வாழ்வில் பலவற்றை சாதிக்க முடியும். இக்காலத்தில் பெரும்பாலான நபர்களுக்கு உடலில் ஏதாவது ஒரு வகையான நோய் குறைபாடு போன்றவை ஏற்பட்டு மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றன. இப்படிப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த மற்ற நாட்களில் மதியம் 12 மணியிலிருந்து ஒன்று முப்பது மணிக்குள் அரச மரத்தை தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் அனைத்தும் விரைவில் தீரும் என்று கூறப்படுகிறது.

உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டும் நோய் பாதிப்பு உண்டானவர்கள் அரச மரத்தை தொட்டு பிறகு உடலில் பாதிப்புக்குள்ளான இடத்தில் தொட்டு வணங்க வேண்டும். உங்கள் வீட்டிற்கு பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அவை உங்கள் செல்வம் வரவையும், வசீகர சக்தியும் பாதிக்கும் என்பதால், உங்கள் வீட்டில் துஷ்ட சக்திகள் புகுவதற்கு வழிவகை செய்கின்றன.

ஒரு செவ்வாய்க்கிழமை அன்று உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் வாடிய செடிகளை வேருடன் பிடுங்கி ஓடும் ஆற்று நீரில் போட்டு விடுவதால் சக்தி பாதிப்புகள் நீங்கும். வறுமை மற்றும் கடன் பிரச்சனை அவதிப்படுபவர்கள் வளர்பிறை செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நாட்டு பசு மாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வருவதால் வீட்டில் துரதிர்ஷ்டங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பெருகும்.

செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் வீட்டில் இருக்கும் துளசி மாடத்திற்கு தீபமேற்றி வழிபட துஷ்ட சக்திகள் பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்கும். வீட்டில் வளமை என்றென்றும் நிலைத்திருக்கும். பெரும்பாலான மனிதர்களை ஆட்டுவிக்கும் முக்கிய பிரச்சினைகளாக திருமண தாமதம், குடும்ப பொருளாதார நிலை மற்றும் படித்த படிப்புக்கேற்ற வேலை இன்மை ஆகியவை உள்ளன.

இந்த கஷ்டங்களை அனுபவிக்கும் நபர்கள் தங்களின் தோஷங்களை நீக்கி விரும்பிய பலன்களை பெறுவதற்கு ஆண்களாக இருந்தால் சனிக்கிழமை அன்றும், பெண்களாக இருந்தால் வெள்ளிக்கிழமை அன்றும் நல்லெண்ணையை உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து பஞ்சகவ்யம் சேர்த்த நீரில் குளித்து முடித்ததும் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட தோஷங்கள் விலகி மேற்கூறிய பிரச்சனைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *