ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

தீர்க்க சுமங்கலி பாக்கியம் ஆடி கடை வெள்ளியில்

அம்மனுக்குரிய மாதமாக கருதப்படும் ஆடி மாதம் முழுவதும் அம்மன் ஆலயங்களில் மிக விசேஷமாக இருக்கும் அம்மனின் திருநாமங்கள் எங்கு சென்றாலும் நாம் கேட்கும் அளவிற்கு ஒலித்துக் கொண்டே இருக்கும் இத்தகைய சிறப்பு வாய்ந்த மாதத்தில் அம்மனுக்கே உரிய மங்கலம் வாய்ந்த வெள்ளிக்கிழமை அன்று அம்மனை நினைத்து பூஜை செய்வது மிகவும் சிறந்தது ஆகும் . இத்தகைய ஆடி மாதத்தில் மிக மிக சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக கருதப்படுவது ஆடி கடை வெள்ளியாகும் இந்த தினத்தில் சுமங்கலி பெண்கள் சுமங்கலி பூஜை செய்தால் தீர்க்க சுமங்கலியாக வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புடனும் குடும்பத்தில் இன்பம் நிறைந்து மகிழ்ச்சியுடன் வாழலாம் சிறப்பு வாய்ந்த ஆடி கடை வெள்ளியன்று சுமங்கலி பெண்கள் செய்ய வேண்டியவை என்னவென்று பின்வருமாறு பார்க்கலாம்..

ஆடி கடை வெள்ளியில் தீர்க்க சுமங்கலி பூஜை

ஆடி கடை வெள்ளியன்று தீர்க்க சுமங்கலி பூஜை எவ்வாறு செய்ய வேண்டும் என்று பல பெண்களுக்கு குழப்பம் ஏற்பட்டு இருக்கும் இனி ஆத்தகைய குழப்பம் உங்களுக்கு தேவையில்லை இன்றைய மங்கள நாளில் உங்களுக்கு தெரிந்த ஆன்மீகத்தில் ஞானம் மிக்க சுமங்கலி பெண்கள் வயதில் மூத்த சுமங்கலி பெண்கள் ஆகியோரை வீட்டிற்கு அழைக்க வேண்டும்

எண் அடிப்படையில் அழைக்க வேண்டும் என்று கணக்கில்லை நீங்கள் ஒருவரை அழைத்தால் கூட போதுமானது அன்றைய தினம் அவர்கள் உங்கள் சொந்தக்காரர்கள் அல்லது தெரிந்தவர்களோ கிடையாது அந்த அம்மனை உங்கள் வீட்டிற்கு வருகை தந்ததாக நினைத்து அம்மனுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் அவர்களுக்கு செய்ய வேண்டும் அவர்கள் உங்கள் வீட்டிற்கு வரும் பொழுதே நீங்கள் மங்கள முகத்துடன் புன்னகை நிறைந்த என் முகத்துடன் வரவேற்க வேண்டும் பின்பு அவர்களுக்கு மஞ்சள் குங்குமம் ஆகியவற்றை தந்து மனைகள் உட்கார வைக்க வேண்டும் .

அமர்ந்த சுமங்கலி பெண்களுக்கு மாலை அல்லது பூ அணிவித்து அவர்களுக்கு பாத பூஜை செய்ய வேண்டும் மஞ்சள் குங்குமம் பூ ஆகியவற்றை வைத்து பாத பூஜை செய்த பின் அவர்களுக்கு தாம்பூல தொட்டு வைத்து கொடுக்க வேண்டும் தாம்பூல தட்டில் அதிகமாக அது இது இருக்க வேண்டும் என்று அவசியமில்லை உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் கொடுக்கலாம்.

தாம்பூல தட்டில் இடம்பெற வேண்டிய பொருட்கள்

சுமங்கலி பூஜை அன்று தாம்பூல தட்டில் வைத்து கொடுக்க வேண்டிய பொருட்கள் என்னவென்றால் கண்டிப்பாக வெற்றிலை பாக்கு இருக்க வேண்டும் மேலும் மஞ்சள் குங்குமம் பூ இரண்டு வாழைப்பழம் வைத்து கொடுத்தால் போதுமானது பணம் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று இல்லை நீங்கள் மனதார ஒரு ரூபாய் வைத்து கொடுத்தால் கூட அதுவே உங்களுக்கு மிகுந்த நன்மையை கொடுக்கும்.

அவர்களுக்கு தாம்பூல தட்டை கொடுத்த பின் அவர்களிடம் இருந்து ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் வகிட்டிலும் தாலியிலும் அவர்கள் கையால் குங்குமம் வைத்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க : சினேகா பிரசன்னா வீட்டு வரலஷ்மி பூஜை

இவ்வாறு நீங்கள் ஆடி கடை வெள்ளியன்று செய்தால் தீர்க்க சுமங்கலியாக வாழ்நாள் முழுவதும் இருக்கலாம் மேலும் குடும்பம் செல்வ செழிப்புடனும் மகிழ்ச்சி நிறைந்தும் காணப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *