பேஸ்புக்கில் கொரோனா வதந்திகள்!
தற்போது கொரோனா தொற்று பற்றி பலவித தவறான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கொரோனா தொடர்பான தவறான 7 மில்லியன் பதிவுகளை இந்த இரண்டாம் காலாண்டில் மட்டும் நீக்கியுள்ளனர். இதைத் தடுக்கவும் சுயத்திற்கு மற்றும் சிறுவர் பாலியல் தொல்லைகள் தொடர்பான பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இதன் திட்டங்களை மேம்படுத்த ஆலோசனை வழங்க அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு வெளிவர உள்ள அளவீடுகளைத் தணிக்கை செய்ய நிபுணர்களிடமிருந்து ஆலோசனை பெறுவதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக இந்தச் சமூக வலைத்தளம் கூறியுள்ளன தேவையற்ற விளம்பரங்கள் ஜூலை மாதம் திட்டமிட்ட அதன்பேரில் இந்த முடிவை எடுக்க உள்ளனர்.

2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆறாவது சமூக தரநிலை அமலாக்க அறிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தடவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவல்களை மெருகேற்ற அதன் தளர்வான அணுகுமுறைகளின் பின்னடைவை சரி செய்யும் வகையில் விதிகளைக் கடுமையாக்கி உள்ளன. முதலாம் காலாண்டில் 9.6 மில்லியன் பதிவுகளை நீக்கியது இரண்டாவது காலாண்டில் தேவையற்ற பதிவுகளைக் கருதப்பட்ட சுமார் 22.5 மில்லியன் பதிவுகளை நீக்கியுள்ளது.
தொழில் நுட்ப முன்னேற்றங்கள் தான் இதற்குக் காரணம் என்று கூறுகின்றது பயங்கரவாத அமைப்புகளுக்குச் சம்பந்தப்பட்ட 8.7 மில்லியன் பதிவுகளை நீக்கியுள்ளனர். தவறான பதிவுகள் முன்பு 6.3 மில்லியன் ஆக இருந்தன முதல் காலாண்டில் 4.7 மில்லியன் பதிவுகளை நீக்கியது. இதனுடன் ஒப்பிடும்போது 4 மில்லியன் பதிவுகள் அதிகமாகக் காணப்படுகிறது என்பது தெரிகிறது.

இத்தனை லட்சம் தவறான பதிவுகள் என்று மலைத்துப் போன ஃபேஸ்புக் இதுக்கான நடவடிக்கைகளை எல்லாம் எடுக்க வேண்டும் என பேஸ்புக் முடிவு செயதிருக்கின்றது. கொரோனா வதந்திகள் நம்மைப் பெருமளவில் ஆட்டிப் படைகின்றது. அந்தப் பீதி பலரை பெருமளவில் மனதளவில் பாதிக்கவும் செய்திருக்கின்றது.