செய்திகள்தமிழகம்

ரேஷனில் இலவச அரிசி வழங்க தமிழக அரசு அறிவிப்பு

ஜூலை 1 முதல் 3 தேதி வரை பணம் கொடுத்து பருப்பு, எண்ணெய், சர்க்கரையை விலைக்கு வாங்கிய குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த மாதம் அவை விலையில் ஈடு செய்ய வேண்டும் என அறிவிப்பு வந்துள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு செல்பேசியில் இதற்கான குறுஞ்செய்தியும் அனுப்பப்படும் என்று தகவல் வந்துள்ளது. இம்மாதத்தில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கூடுதல் அரிசியை நியாயவிலை கடைகளில் மீண்டும் சென்று இம்மாதம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ இலவச அரிசி கூடுதலாக வழங்குவதாக தெரிவித்துள்ளனர். ஜூலை மாத அளவின்படி நவம்பர் வரை அரிசி இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

உணவு மற்றும் நுகர் பொருள் வழங்கும் துறையின் அமைச்சர் காமராஜ் வெளியிட்ட அறிக்கையின்படி. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜூலை 31 வரை சில தலைப்புகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் கூடுதல் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை இல்லாமல் வழங்கப்பட்டதை போலவே.

இம்மாதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

நவம்பர் மாதம் வரை ரேஷனில் இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *