பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்ளுக்கான தனித்தேர்வு
தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று அதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மார்ச் 24 ஆம் தேதி நடைபெற்ற தேர்வை எழுததாத மாணவர்களுக்கான மறு தேர்வை அரசு அறிவித்திருந்தது. இந்த தேர்வில் எழுதாத மாணவர்கள் மறுப்பு வாய்ப்பு மூலம் எழுதுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக மார்ச் 24ஆம் தேதி தேர்வு எழுத முடியாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்கு அரசு மறுப்பு தேர்வினை இன்று எழுத அறிவித்திருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் 289 தேர்வு மையங்களில் 743 மாணவர்கள் எழுதுகின்றனர். சென்னையில் 20 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது101 மாணவர்கள் மறு வாய்ப்பு தேர்வு எழுத உள்ளனர், என்ற தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கான பஸ் வசதி ஆகியவற்றினை அரசு செய்துள்ளது என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 743 மாணவர்களில் தனித்தேர்வர்கள் எழுதுவோர்களோ அதிகம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தகவலுக்கு கொடுத்துள்ளது. தேர்வு பணிக்காக அந்தந்த பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தனித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும் என்று தேர்வு இயக்கம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வுக்குத் தயராகக் காணப்பட்டாலும் அவர்களுடைய தொடர் முயற்சி வெற்றியை அதிகரித்துக் கொடுக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன. தனித்தேர்வர்கள் அதிகமாக இந்தத் தேர்வை எழுதுபவர்களின் அதிகம் இருக்கின்றனர். இவர்களுக்கான சானிடைசர் ஆகியவையும் கொடுக்கப்படும். தூய்மை சுகாதாரம் ஆகியவை முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும். மாணவர்களுக்கான பேரூந்து வசதிகளும் பாதுகாப்பாகச் செய்யப்பட்டுள்ளது.