ஆன்மிகம்ஆலோசனை

108 போற்றி ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு

ஸ்ரீ வாராஹி அம்மன் பெண்கள் தொடர்ந்து வழிபட்டு வருவதால் குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பாள். வாராகியை பெண்கள் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வாராஹியை வழிபட்டு வரலாம். வாராஹி அம்மன் 108 போற்றி பாராயணம் செய்யலாம்.

சப்த கன்னிமார்கள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னி தான் வாராஹி அம்மன். வழக்கு தீர்ப்பு, வியாபாரப் தடங்கள், கோர்ட் கேசுகள், மேலும் குடும்ப பிரச்சனை, குழந்தையின்மை இவற்றிற்கெல்லாம் வாராஹியை மனதார வேண்டி வழிபட்டு வருவதால் கைமேல் பலன் கிடைக்கும்.

108 போற்றி ஸ்ரீ வாராஹி அம்மன்

ஓம் வாராஹி போற்றி

ஓம் சக்தியே போற்றி

ஓம் சத்தியமே போற்றி

ஓம் ஸாகாமே போற்றி

ஓம் புத்தியே போற்றி

ஓம் வித்துருவமே போற்றி

ஓம் சித்தாந்தி போற்றி

ஓம் நாதாந்தி போற்றி

ஓம் வேதாந்தி போற்றி

ஓம் சின்மயா போற்றி (10)

ஓம் ஜெகஜோதி போற்றி

ஓம் ஜெகஜனனி போற்றி

ஓம் புஷ்பமே போற்றி

ஓம் மதிவதனீ போற்றி

ஓம் மனோநாசினி போற்றி

ஓம் கலை ஞானமே போற்றி

ஓம் சமத்துவமே போற்றி

ஓம் சம்பத்கரிணி போற்றி

ஓம் பனை நீக்கியே போற்றி

ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி (20)

ஓம் தேஜஸ் வினி போற்றி

ஓம் காம நாசீனி போற்றி

ஓம் யகா தேவி போற்றி

ஓம் மோட்ச தேவி போற்றி

ஓம் நானழிப்பாய் போற்றி

ஓம் ஞானவாரினி போற்றி

ஓம் தேனானாய் போற்றி

ஓம் திகட்டா திருப்பாய் போற்றி

ஓம் தேவ கானமே போற்றி

ஓம் கோலாகலமே போற்றி (30)

ஓம் குதிரை வாகனீ போற்றி

ஓம் பன்றி முகத்தாய் போற்றி

ஓம் ஆதி வாராஹி போற்றி

ஓம் அனாத இரட்சகி போற்றி

மேலும் படிக்க : நவராத்திரி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரம்

ஓம் ஆதாரமாவாய் போற்றி

ஓம் அகாரழித்தாய் போற்றி

ஓம் தேவிக்குதவினாய் போற்றி

ஓம் தேவர்க்கும் தேவி போற்றி

ஓம் ஜுவாலாமுகி போற்றி

ஓம் மாணிக்கவீணோ போற்றி (40)

ஓம் மரகதமணியே போற்றி

ஓம் மாதங்கி போற்றி

ஓம் சியாமளி போற்றி

ஓம் வாக்வாராஹி போற்றி

ஓம் ஞானக்கேணீ போற்றி

ஓம் புஷ்ப பாணீ போற்றி

ஓம் பஞ்சமியே போற்றி

ஓம் தண்டினியே போற்றி

ஓம் சிவாயளி போற்றி

ஓம் சிவந்தரூபி போற்றி (50)

ஓம் மதனோற்சவமே போற்றி

ஓம் ஆத்ம வித்யே போற்றி

ஓம் சமயேஸ்ரபி போற்றி

ஓம் சங்கீதவாணி போற்றி

ஓம் குவளை நிறமே போற்றி

ஓம் உலக்கை தரித்தாய் போற்றி

ஓம் சர்வ ஜனனீ போற்றி

ஓம் மிளாட்பு போற்றி

ஓம் காமாட்சி போற்றி

ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி (60)

ஓம் முக்கால ஞானி போற்றி

ஓம் சர்வ குணாதி போற்றி

ஓம் ஆத்ம வயமே போற்றி

ஓம் ஆனந்தானந்தமே போற்றி

ஓம் நேயமே போற்றி

ஓம் வேத ஞானமே போற்றி

ஓம் அகந்தையழிப்பாய் போற்றி

ஓம் அறிவளிப்பாய் போற்றி

ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி

ஓம் கலையுள்ளமே போற்றி (70)

ஓம் ஆன்ம ஞானமே போற்றி

ஓம் சாட்சியே போற்றி

ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி

ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி

ஓம் மரணமழிப்பாய் போற்றி

ஓம் ஹிருதய வாகீனி போற்றி

ஓம் ஹிமாசல தேவி போற்றி

ஓம் நாத நாமக்கிரியே போற்றி

ஓம் உருகும் கோடியே போற்றி

ஓம் உலுக்கும் மோகினி போற்றி (80)

ஓம் உயிரின் உயிரே போற்றி

ஓம் உறவினூற்றே போற்றி

ஓம் உலகமானாய் போற்றி

ஓம் வித்யாதேவி போற்றி

ஓம் சித்த வாகினீ போற்றி

ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி

ஓம் இலயமாவாய் போற்றி

ஓம் கல்யாணி போற்றி

ஓம் பரஞ்சோதி போற்றி

ஓம் பரப்பிரஹ்மி போற்றி (90)

ஓம் பிரகாச ஜோதி போற்றி

ஓம் யுவன காந்தீ போற்றி

ஓம் மௌன தவமே போற்றி

ஓம் மேதினி நடத்துவாய் போற்றி

ஓம் நவரத்ன மாளிகா போற்றி

ஓம் துக்க நாசினீ போற்றி

ஓம் குண்டலினீ போற்றி

ஓம் குவலய மேனி போற்றி

ஓம் வீணைஒலி யே போற்றி

ஓம் வெற்றி முகமே போற்றி (100)

ஓம் சூதினையழிப்பாய் போற்றி

ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி

ஓம் அண்ட பேரண்டமே போற்றி

ஓம் சகல மறிவாய் போற்றி

ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி

ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி

ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி

ஓம் வாராஹி பதமே போற்றி. (108)

வராகி பன்றி முகத்துடன் மனித உடலும் கொண்ட இந்த அம்மனை வழிபட கோபத்தின் உச்சம் தொட்டாலும், அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவர். அம்மனின் ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதம். எனவே வராகியை தொடர்ந்து வழிபட்டு வர கண்கூடாக பலனைப் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *