குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் முறை!

சுய படிப்பு :

டிஎன்பிஎஸ்சியைப் பொருத்தவரை சுயப்படிப்பு என்பதுதான் மிகுந்த அவசியாமாகும். ஆனாலும் பயிற்சி நிறுவனங்களுக்குச் செல்ல கூடாது என்றும் கூற இயலாது. இருப்பினும் பயிற்சி நிறுவனங்கள் செல்ல இயலாதவர்களுக்குச் சிலேட்குச்சி போன்ற இணையங்கள் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மையங்கள் எவ்வாறு படிக்க வேண்டுமென ஒரு சிறப்புப் பயிற்சி அளிக்கின்றன. அதுவே டிஎன்பிஎஸ்சி தேர்வை வெல்ல போதுமான வளங்களாகும். பொதுதேர்வை எதிர்கொள்ளும் உங்களுக்குத் தேவையான அனைத்து விவரங்களும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், அகடமிகள், வெற்றி பெற்ற மாணவர்கள் மூலம் தகவல்கள் பெற்றுச் சிலேட்குச்சி தளம் வழங்குகிறது. இதனை அனைத்து பொதுதேர்வுக்குத் தயாரகும் மாணவர்களும் படித்துப் பயன் பெற வேண்டும் . 

படிக்கும் வழிமுறைகள் :

குரூப் ஒன் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அனைவருக்குமான சிலேட்குச்சி  வழங்கும் டிப்ஸ்கள் எவ்வாறு படிக்க வேண்டும், அதனை எவ்வாறு தேர்வில் அப்ளை செய்ய வேண்டும், போன்ற விளக்கங்களுடன் கடுமையான உழைப்புச் சுமார்ட் ஒர்க் கொஞ்சம் உபயோகித்தால் போதுமானது ஆகும். படிக்கும் நேரங்கள் தேர்வு எழுதுவோரின் சவுகரியம் பொருத்து முடிவு செய்யலாம். வேலை செய்து படிப்பவர்கள் தினமும் 100 கேள்விப் பதில்கள் உடன் இயன்ற பாடங்கள் தினசரி 2 மணி நேரமாவது படிக்க வேண்டும். படிக்கும்போது ஒருமணி நேரத்திற்கொரு முறை ஐந்து நிமிட இடைவேளை தர வேண்டும். ஹாக்கிணி, தர்மசக்கரம் போன்ற யோக முத்திரைகள் செய்யலாம் மூளை நன்கு சுறுசுறுப்படையும். தொடர்ந்து படிக்க முடியும் மேலும் படித்தவற்றைத் திருப்பி பார்க்கவும் முடியும். கீ வோர்ட்ஸ் எனப்படும் வார்தை ஜாலங்கள் வைத்து படித்தால் எளிதில் குறிப்புகளை நினைவில் கொள்ளலாம். ஆண்டுகள் நினைவில் கொள்ள நிகழ்வுகளை நமக்குப் பிடித்த தலைவர்கள், பெற்றோர்கள், பெரியோர்கள் பிறந்ததினம், வருடத்துடன் ஒப்பிட்டு நினைவு கொள்ள வேண்டும் . 

கேள்வித்தாள் கணிப்பு :

கடந்த ஐந்து அல்லது மூன்றாண்டுகள் கேள்வித்தாள்கள் நன்றாகப் படிக்க வேண்டும் அதனை வைத்துக் கேள்விகளுக்கான முன்னுரிமைகள் தொகுக்க வேண்டும். அனைத்தும் படிக்க வேண்டும் தான் ஆனால் முன்னுரிமை முக்கியமானது உதாரணமாகக் குருப் ஒன் முதன்மை தேர்வு வெற்றி பெற 200 கேள்விகளிள் 50 கேள்விகள் கணிதமெனில் அதற்கு முன்னுரிமை கொடுத்துக் கட் ஆஃபில் பலர் வெல்கின்றனர். இவ்வாறு டிரிக்குகள் எனப்படும் நுணுக்கம் அறிந்து செயல்பட வேண்டும் 

அடுத்தக் கவனம் செலுத்த வேண்டியது 150 கேள்விகளிள் எது அதிகப்படியான எண்ணிக்கை கொண்டது எனில் நடப்பு மற்றும் அதனுடன் இணைந்த ஜிகே கேள்விகள் 30 முதல் 35 கேள்விகள், பின் அறிவியியல் 20 முதல் 25 கேள்விகள் வரை இடம் பெற்றிருக்கும் இதன்படி பார்த்தால் குருப் ஒன் தேர்வில் உங்கள் வசம் 90 கேள்விகள் கேட்கப்படும் பகுதிகள் தெரிந்துவிட்டது. மீதம் வரலாறு, பொருளியல், புவியியல், இந்திய அரசியலமைப்புப் பகுதிகளில் 15 முதல் 20 வரை ஒவ்வொரு பாடங்களிலும் ஏற்றம் இறக்கங்களுடன் கேள்விகள் இருப்பினும் 15 முதல் 20 கேள்விகள் நிச்சயம் அமையும். இவற்றிலும் கேள்வித்தாளை நன்று ஆராய்ந்தால் தவிர்க்க முடியாத கேள்விகள் எப்பாடங்களில் கேட்கப்படுகின்றன என்பதை அறியலாம். ஒரு சிறிய உதாரணத்திற்கு இந்திய அரசியலமைப்புப் பகுதியில் அடிப்படை உரிமைகள், கடமைகள், முகவுரை, அரசியலமைப்பு உருவாக்கம் இவற்றில் நிச்சயம் இரண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன கேள்விகள் மாறுபடலாம் ஆனால் குறிப்பிட்ட பாடங்களில் கேள்வி அமைவது உறுதி, இவற்றைத் கணித்துச் செயல்ப்பட்டால் வெற்றி உறுதி இனி வரும காலங்களில் சிலேட்குச்சி தளம் தொடர்ந்து இவற்றை விளக்கும் .

பாடங்களில் சொந்த குறிப்பு, சிலேட்குச்சி தளம் போன்ற இணையக் குறிப்புகள், பொதுஅறிவு புத்தகங்களின் குறிப்புகள் போன்றவற்றைத் தொகுத்து வைக்க வேண்டும் தொடர்ந்து அவற்றை ரிவைஸ் செய்ய வேண்டும். மேலும் கேள்விகள் உருவாக்கி விடைத்தருவதை வாடிக்கையாகக் கொள்ள வேண்டும் அல்லது சிலேட்குச்சி தளம் போன்ற இணையக் கேள்விகளைத் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.

மேலும் நாளிதழ்களிள் கேள்விகள் தரப்படுகின்றன அவற்றைத் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். சுய பரிசோதனை எனப்படும் செல்ஃப் டெஸ்ட் நம்மை மேம்படுத்தும் தேர்வில் வெற்றி பெற வைக்கும். ஆகவே உங்களது வெற்றிக்காகத் தொடர்ந்து படியுங்கள் சிலேட்குச்சி.

கேள்வித்தாள் குறிப்பு :

முந்தைய ஆண்டுக் கேள்விகள் அடங்கிய புத்தகங்கள் எளிதாகக் கிடைக்கின்றன . அவற்றைப் பாடவாரியாகப் பெறலாம் . அவற்றைத் தொடர்ந்து சேகரிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். படித்தலுடன் அவற்றை டெஸ்ட் மூலம் நினைவு கொள்ள வேண்டும். மேலும் சிலேட்குச்சி தொடர்ந்து கேள்வித்தாள் வழங்கும். தினசரி சில கேள்விகளைப் பயிற்சியில் வழங்கும் அவற்றை தொடர்ந்து படியுங்கள் வெற்றிப் படிகள் உங்களுக்காகக் காத்து நிற்கின்றன பயணியுங்கள்.

“விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் வருமா வீட்டுகுயிலை கூட்டில் வைத்தால் பாட்டு பாடுமா“ என்ற வரிகளை நினைவில் கொள்ளுங்கள் இடம், சூழல் கருதி செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் .