Jallikattu bulls

காளைகளை தாக்கிய கொடூரன்…பொறிவைத்து பிடித்த போலீசார்..

ஜல்லிக்கட்டு காளைகளை சரமாரியாக தாக்கிய காளை உரிமையாளரை போலீஸ் பொறி வைத்து தூக்கியுள்ளது. காளைகள் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பொங்கலை முன்னிட்டு, மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, மற்றும் அலங்கநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு கோலகலமாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு அன்று வாலிபர் கட்டையால் காளையை தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட பாலமேடு காவல்துறையினர், காளையை தாக்கிய கீழச்சின்னனம்பட்டி பவுன் (வயது 32), என்பவரை மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *